| மண்மகள் இலம்பகம் |
1194 |
|
|
| 2109 |
பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப் | |
பன்மலர் வழிபடக் குறைக்கும் | |
வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்தே | |
வேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார். | |
|
|
(இ - ள்.) அள் இலைப் பலவின் அளிந்து வீழ் சுளையும் - செறிந்த இலையை உடைய பலவின் சுளையையும்; கனிந்து வீழ்வாழையின் பழனும் - கனிந்து வீழும் வாழைப்பழத்தையும்; புள்ளிவாழ் அலவன் பொறிவரிக் கமஞ்சூல் ஞெண்டினுக்கு உய்த்து - புள்ளியை உடையதாய் அங்கே வாழும் நண்டு, புள்ளியையும் வரியையும் உடைய நிறைந்த சூலையுடைய நண்டுக்குக் கொடுத்து; நோய் தணிப்பான் - அதன் வேட்கையைத் தணிப்பதற்கு; பள்ளிவாய் நந்தும் ஆமையும் பணித்து - தம்மிடத்திலே வாழும் நத்தையையும் ஆமையையும் மிதித்துக் கொண்டு; பல்மலர் வழிபடக் குறைக்கும் - பலமலர்களையும் வழியாம்படி குறைக்கின்ற; வெள்ளநீர்ப் படப்பை விதையம் வந்து அடைந்து - நீர்ப் பெருக்கையுடைய, தோட்டங்கள் சூழ்ந்த விதேக நாட்டைச் சேர்ந்து; வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார் - அரசனுக்கு அறிவிக்க முன்னே ஆள் விட்டனர்.
|
|
(வி - ம்.) அள் - செறிவு. பலவு - பலாமரம். பழன் - பழம். அலவன் - நண்டு. கமம் - நிறைவு. ஞெண்டு - நண்டு. பணித்து - மிதித்து, விதையம் - விதேகநாடு. வேந்தன் : கோவிந்தராசன்; விசையை உடன்பிறந்தோன்.
|
( 8 ) |
| 2110 |
வீட்டிடந் தோறும் வில்லக விரல்போற் | |
பொருந்திநின் றொருங்கெதிர் கொள்கென் | |
றேட்டின்மேற் றீட்டித் திருவெழுத் திட்டாங் | |
கிறைவனுந் தமர்களைப் பணிப்ப | |
நாட்டகத் தமிர்து நளிகட லமிர்து | |
நல்வரை யமிர்தமு மல்லாக் | |
காட்டகத் தமிர்துங் காண்வரக் குவவிக் | |
கண்ணகன் புறவெதிர் கொண்டார். | |
|
|
(இ - ள்.) இறைவனும் - அந்நாட்டு மன்னனும்; வீட்டிடந் தோறும் - வீட்டினிடந்தோறும்; வில்லக விரல்போல பொருந்தி நின்று - விற்பிடித்த விரல்போற் கிட்டி நின்று; ஒருங்கு எதிர் கொள்க என்று - ஒன்று சேர எதிர்கொள்கவென்று; ஏட்டின் மேல் தீட்டித் திருஎழுத்து இட்டுத் தமர்களை ஆங்குப் பணிப்ப - ஏட்டிலே எழுதிக் கைச்சாததிட்டுப் பணிபுரிவோரை ஆங்காங்
|