பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1203 

யினராய்; கோதையர் - கோதையராய்; மருங்கின் என்னோரும் - அருகில் நின்ற எல்லோரும்; வீதியுள் மன்ன குமரனை ஏத்தி வாழ்த்தி மகிழ்ந்தார் தெருவிலே வந்த அரசகுமாரனைப் புகழ்ந்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.

   (வி - ம்.) ஏத்தல் : புகழ்தல், வாழ்த்துதல் : பல்லாண்டு முதலியன கூறல்.

   மருங்கின் என்னோரும் என மாறுக. என்னோரும் : எல்லோரும் : கலை : மேகலை. மன்னகுமரன் : சீவகன்.

( 27 )

வேறு

2129 விளங்குபாற் கடலிற் பொங்கி
  வெண்டிரை யெழுவ வேபோற்
றுளங்கொளி மாடத் துச்சித்
  துகிற்கொடி நுடங்கும் வீதி
யுளங்கழித் துருவப் பைந்தார்
  மன்னவன் கோயில் சோ்ந்தா
னிளங்கதிர்ப் பருதி பௌவத்
  திறுவரை யிருந்த தொத்தான்.

   (இ - ள்.) இளங்கதிர்ப் பருதி பௌவத்து இறுவரை இருந்தது ஒத்தான் - இளங்கதிரையுடைய ஞாயிறு கடலிலே உதயகிரியிலே இருந்த தன்மையைப் போன்றவன்; விளங்கு பாற்கடலின் பொங்கி வெண்திரை எழுவவே போல் விளங்குகின்ற பாற்கடலிலே பொங்கி வெண்மையான அலைகள் எழுவனபோல; துளங்கு ஒளி மாடத்து உச்சித் துகில் கொடி நுடங்கும் வீதி அசையும் ஒளியை யுடைய மாடங்களின் உச்சியிலே கொடியாடை அசையும் தெருவிலே ; உளம் கழித்து - நடுவே சென்று; உருவப் பைந்தார் மன்னவன் கோயில் சேர்ந்தான் - அழகிய பைந்தாரையுடைய வேந்தன் கோயிலை அடைந்தான்.

   (வி - ம்.) ஒத்தான் : எழுவாய்; வெண்டிரை துகிற்கொடிக் குவமை. உளம் - நடுவிடம். கோயில் - அரண்மனை, பௌவம் : கடல். இறுவரை : தங்கும் மலை; ஈண்டுக் குணக்குன்று.

( 28 )
2130 இழையொளி பரந்த கோயி
  லினமலர்க் குவளைப் பொற்பூ
விழைதகு கமல வட்டத்
  திடைவிராய்ப் பூத்த வேபோற்