| மண்மகள் இலம்பகம் |
1223 |
|
|
| 2162 |
இன்ன பொங்குளைப் புரவிபண் ணுறுத்தன வியறோ் | |
பொன்னும் வெள்ளியு மணியினும் பொலிந்து வெண் மதியத் | |
தன்னை யூர்கொண்ட தகையன தொகைசொலி னறுநூ | |
றென்னு மீறுடை யிருபதி னாயிர மிறையே. | |
|
|
(இ - ள்.) இறையே! - அரசே!; இன்ன பொங்கு உளைப்புரவி பண் உறுத்தன இயல் தேர் - இத் தன்மைய பொங்கும் உளையையுடைய புரவிகளாற் பண்ணுறுத்தப்பட்டன ஆகிய விளங்கும் தேர்கள்; பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து - பொன்னாலும் வெள்ளியினாலும் மணியினாலும் பொலிவுற்று; வெண்மதியம் தன்னை ஊர் கொண்ட தகையன - வெண் திங்களை ஊர்கோள் கொண்ட தன்மையன; தொகை சொலின் அறுநூறு என்னும் ஈறு உடை இருபதினாயிரம் எண்ணிக்கை கூறின் இருபதினாயிரத் தறுநூறு.
|
|
(வி - ம்.) மதி குறட்டிற்கும்; ஊர் கோள் சூட்டிற்கும் உவமம் இன்ன - இத்தன்மையுடையன. உளை - பிடரிமயிர். இறை : விளி.
|
( 61 ) |
| 2163 |
நொச்சி மாமலர் நிறத்தன நொடிவரு முந்நீ | |
ருச்சி மாக்கதிர் போற்சுடு மொளிதிக ழயில்வா | |
ளெச்சத் தல்லவு மெறிபடை பயின்றுதம் மொன்னார் | |
நிச்சங் கூற்றினுக் கிடுபவர் தோ்மிசை யவரே. | |
|
|
(இ - ள்.) தேர் மிசையவர் - அத் தேரில் உள்ள வீரர்கள் நொச்சி மாமலர் நிறத்தன நொடி வரும் முந்நீர் உச்சி மாக்கதிர் போற் சுடும் - புகரால் நொச்சி மலர் போலும் நிறத்தனவாய்; கூறற்குரிய கடலை உச்சியிலிருந்து சுடுகின்ற ஞாயிறுபோற் சுடுகின்ற; ஒளி திகழ் அயில்வாள் - ஒளியால் விளங்கும் கூரிய வாளையும்; எச்சத்து அல்லவும் எறிபடை பயின்று - கூறாமல் விட்ட பிற எறி படைகளையும் பழகி; தம் ஒன்னார் நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் - தம் பகைவரை உறுதியாகக் கூற்றுவனுக்குக் கொடுப்பவர்.
|
|
(வி - ம்.) 'எச்சத்து நொடிவரும்' என இயைப்பர் நச்சினார்க்கினியர். இந்த நான்கு பாட்டுக்களும் தேரையும் தேர்க்குதிரையையும் தேர் வீரரையும் பற்றிக் கூறின.
|
( 62 ) |
வேறு
|
| 2164 |
எயிற்றுப்படை யாண்மையினி | |
னிடிக்கும்புலி யொப்பார் | |
பயிற்றியவில் வாள்பணிக்கும் | |
வேலோடுடன் வல்லார் | |
|