| மண்மகள் இலம்பகம் |
1246 |
|
|
|
(வி - ம்.) பருதி - வட்டம், 'பருதி போகிய புடை கிளைகட்டி' (பதிற். 74) என்றார் பிறரும்.
|
( 102 ) |
| 2204 |
அருந்தவக் கிழமை போல | |
விறாதவில் லறாத நாண்வாய்த் | |
திருந்தினார் சிந்தை போலுந் | |
திண்சரஞ் சுருக்கி மாறா | |
யிருந்தவன் பொறியும் பன்றி | |
யியற்றரும் பொறியு மற்றாங் | |
கொருங்குட னுதிர வெய்தா | |
னூழித்தீ யுருமோ டொப்பான். | |
|
|
(இ - ள்.) ஊழித்தீ உருமொடு ஒப்பான் - ஊழித் தீயையும் இடியேற்றையும் போன்றவன்; அருந்தவக் கிழமைபோல இறாத வில் அறாத நாண்வாய் - அரிய தவப்பயன் போல இறாத வில்லின் அறாத நாணிலே; திருந்தினார் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி - முனிவரர் உள்ளம் போலத் திண்ணிய கணையை அடக்கி; மாறாய் இருந்தவன் பொறியும் - மாறுபட்டிருந்தவனாகிய கட்டியங்காரனின் நல்வினையும்; பன்றி இயல் தரும் பொறியும் - பன்றி யிருந்த இலக்கணம் அமைந்த பொறியும்; அற்று ஆங்கு ஒருங்கு உடன் உதிர - அற்று அவ்விடத்தே ஒன்று சேர விழும்படி; எய்தான் - எய்தான்.
|
|
(வி - ம்.) அதனை எய்த அன்றே கட்டியங்காரனும் படுதலின், 'உடன்' என்றார். தவக்கிழமை வில்லுக்கும் நானுக்கும் உவமை, விசயனுக்கு அவை இற்றும் அற்றும் போனமை கருதி இங்கு அவ்வுவமை கூறினார்.
|
( 103 ) |
| 2205 |
இலங்கெயிற் றேன மேவுண் | |
டிருநிலத் திடித்து வீழக் | |
கலங்குதெண் டிரையுங் காருங் | |
கடுவளி முழக்கு மொப்ப | |
உலம்புபு முரசங் கொட்டி | |
யொய்யெனச் சேனை யார்ப்பக் | |
குலம்பகர்ந் தறைந்து கோமான் | |
கோவிந்தன் கூறி னானே. | |
|
|
(இ - ள்.) இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு - விளங்கும் எயிற்றையுடைய அப் பன்றி அம்பினால் தாக்கப்பெற்று; இடித்து இருநிலத்து வீழ - முழங்கிப் பெருநிலத்தே விழுந்தபோது; கலங்கு தெண்திரையும் காரும் கடுவளி முழங்கும் ஒப்ப - மோது
|