பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1246 

   (வி - ம்.) பருதி - வட்டம், 'பருதி போகிய புடை கிளைகட்டி' (பதிற். 74) என்றார் பிறரும்.

( 102 )
2204 அருந்தவக் கிழமை போல
  விறாதவில் லறாத நாண்வாய்த்
திருந்தினார் சிந்தை போலுந்
  திண்சரஞ் சுருக்கி மாறா
யிருந்தவன் பொறியும் பன்றி
  யியற்றரும் பொறியு மற்றாங்
கொருங்குட னுதிர வெய்தா
  னூழித்தீ யுருமோ டொப்பான்.

   (இ - ள்.) ஊழித்தீ உருமொடு ஒப்பான் - ஊழித் தீயையும் இடியேற்றையும் போன்றவன்; அருந்தவக் கிழமைபோல இறாத வில் அறாத நாண்வாய் - அரிய தவப்பயன் போல இறாத வில்லின் அறாத நாணிலே; திருந்தினார் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி - முனிவரர் உள்ளம் போலத் திண்ணிய கணையை அடக்கி; மாறாய் இருந்தவன் பொறியும் - மாறுபட்டிருந்தவனாகிய கட்டியங்காரனின் நல்வினையும்; பன்றி இயல் தரும் பொறியும் - பன்றி யிருந்த இலக்கணம் அமைந்த பொறியும்; அற்று ஆங்கு ஒருங்கு உடன் உதிர - அற்று அவ்விடத்தே ஒன்று சேர விழும்படி; எய்தான் - எய்தான்.

   (வி - ம்.) அதனை எய்த அன்றே கட்டியங்காரனும் படுதலின், 'உடன்' என்றார். தவக்கிழமை வில்லுக்கும் நானுக்கும் உவமை, விசயனுக்கு அவை இற்றும் அற்றும் போனமை கருதி இங்கு அவ்வுவமை கூறினார்.

( 103 )
2205 இலங்கெயிற் றேன மேவுண்
  டிருநிலத் திடித்து வீழக்
கலங்குதெண் டிரையுங் காருங்
  கடுவளி முழக்கு மொப்ப
உலம்புபு முரசங் கொட்டி
  யொய்யெனச் சேனை யார்ப்பக்
குலம்பகர்ந் தறைந்து கோமான்
  கோவிந்தன் கூறி னானே.

   (இ - ள்.) இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு - விளங்கும் எயிற்றையுடைய அப் பன்றி அம்பினால் தாக்கப்பெற்று; இடித்து இருநிலத்து வீழ - முழங்கிப் பெருநிலத்தே விழுந்தபோது; கலங்கு தெண்திரையும் காரும் கடுவளி முழங்கும் ஒப்ப - மோது