| மண்மகள் இலம்பகம் |
1312 |
|
|
| 2322 |
மொய்வார் குழலார் முலைப்போர்க்கள | |
மாய மார்பிற் | |
செய்யோன் செழும்பொற் சரஞ்சென்றன | |
சென்ற தாவி | |
வெய்தா விழியா வெகுவத்துவர் | |
வாய்ம டியா | |
மையார் விசும்பின் மதிவீழ்வது | |
போல வீழ்ந்தான். | |
|
|
(இ - ள்.) மொய்வார் குழலார் முலைப் போர்க்களம் ஆய மார்பில் - நெருங்கிய நீண்ட குழலையுடைய மங்கையரின் முலைகளுக்குப் போர்க்களமான மார்பிலே; செய்யோன் செழும் பொன் சரம் சென்றன - ஞாயிறு போன்ற சீவகனுடைய செழுவிய பொற்கணைகள் சென்று பாய்ந்தன; ஆவி சென்றது - (அதனால்) கட்டியங்காரனுடைய உயிர் நீக்கியது; வெய்தா விழியா வெருவத்துவர் வாய் மடியா - வெப்பமுற விழித்துக் கண்டார் அச்சமுறச் செவ்வாயை மடித்து; மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான் - முகில் நிறைந்த வானிலிருந்து திங்கள் வீழ்வதுபோல வீழ்ந்தான்.
|
|
(வி - ம்.) சச்சந்தனை, 'வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான்' (சீவக. 289) என்று ஞாயிற்றினோடு உவமை கூறிப் போந்து, அவன் புதல்வன் அவனேயாமாதலின், ஈண்டும் சீவகனைச் செய்யோன் என்று ஞாயிறாக்கி, அஞ்ஞாயிற்றின் முன்னே மதி நில்லாது கெடும் என்பது தோன்ற, 'மதி' வீழ்வதுபோல வீழ்ந்தான்' என்றார்.
|
|
மேகத்தை யானைக்குவமை, கூறினார். இதனால், சச்சந்தன் பட்ட அன்றுதொட்டு இன்றளவும் கட்டியங்காரன் கொடுங்கோலிருள் பரப்ப அரசாண்ட தன்மையும், அதுதான் இராக் காலத்தே இருள் பரந்து நிற்ப மதியாண்ட தன்மைத்தென்றும் கூறினாராயிற்று.
|
( 221 ) |
வேறு
|
| 2323 |
கட்டியங் கார னென்னுங் | |
கலியர சழிந்த தாங்குப் | |
பட்டவிப் பகைமை நீங்கிப் | |
படைத்தொழி லொழிக வென்னாக் | |
கொட்டினர் முரச மள்ள | |
ரார்த்தனர் குருதிக் கண்ணீர் | |
விட்டமு தவன்க ணார்வ | |
மண்மக ணீக்கி னாளே. | |
|