| பூமகள் இலம்பகம் |
1336 |
|
|
|
விட்டுவந்து; எழில் ஆர் வளங்கொள் மாநகர் மழகதிர் குழீஇயின போல - அழகிய வளமிகும் இராசமா புரத்திலே இளங்கதிர் திரண்டாற் போல; பொலிந்து கதிர்முடி விஞ்சையர் களம் கொண்டு ஈண்டினர் - பொலிவுற்று, ஒளிவீசும் முடீயணிந்த விஞ்சையர் யாவரும் இடங்கொண்டு திரண்டனர்.
|
|
(வி - ம்.) 'ஒழிய' என்பதற்குக், 'கலுழவேகன் தங்க' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 35 ) |
| 2362 |
எண்ண மென்னினி யெழின்முடி | |
யணிவது துணிமின் | |
கண்ண னாரொடு கடிகையும் | |
வருகென வரலும் | |
பண்ணி னார்முடி பழிச்சிய | |
மணிபொனிற் குயிற்றி | |
யண்ண லாய்கதி ரலமவரப் | |
புலமக ணகவே. | |
|
|
(இ - ள்.) இனி எண்ணம் என் ? - இனியும் நினைவுகூர்தல் ஏன் ?; எழில் முடி அணிவது துணிமின் - அழகிய முடியை அணிவதை நினைமின் (என்று முன் வந்தோர் அமைச்சரை நோக்கிக் கூற அவர்கள்); கண்ணனாரொடு கடிகையும் - புரோகிதருடன் முழுத்தம் வைப்பவனும்; அண்ணல் ஆய்கதிர் அலம் வரப்புலமகள் நக - தலைமைபெற்ற சிறந்த கதிர்கள் அசையவும் நாமகன் மகிழவும்; பழிச்சிய மணிபொனில் குயிற்றி - புகழ்ந்த மணிகளைப் பொன்னிலே அழுத்தி; முடி பண்ணினார் - மடியமைத்த வரும்; வருக என வரலும் - வருக என்றவுடன் அவர்களும் வரவும்;
|
|
(வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.
|
|
'இனி' யென்றார் காலங்கழிக்குமது தகாது என்றற்கு. என்றதனாலே புரோகிதன் முதலாகத் துறைதோறும் அழைக்க வேண்டுவாரை அழைத்ததும், அங்குரார்ப்பணம் அதிவாசம் முதலியசடங்குகள் யாவும் நடத்தி முழுத்தம் பார்த்திருந்ததுவும் தோன்றக் கூறினார்.
|
|
முடியமைத்தற்குரிய நூல்கள் எல்லாம் முற்ற முடித்தலின், 'நாமகள் மகிழ' என்றார். புலமகள் நகப் புண்ணினாரும் என்க.
|
( 36 ) |
| 2363 |
விரியு மாலையன் விளங்கொளி | |
முடியினன் றுளங்கித் | |
திருவின் மால்வரைக் குலவிய | |
தனையதோர் தேந்தா | |
|