|  இலக்கணையார் இலம்பகம் | 
 1351  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) இளங் களிக்கயல் நஞ்சு மேய்ந்து மதர்ப்பன போல - இளைய, களிப்புடைய கயல்மீன்கள் நஞ்சினைப் பருகிச் செருக்குவனபோல; வாள் கண்கள் அஞ்சி மதர்த்தன - வாள் போன்ற கண்கள் அஞ்சிச் செருக்கியவாய்; உடன் அலர்ந்து பிறழ - எல்லாம் தெளிந்து பிறழ; பஞ்சுசூழ் மணிமேகலை பரிந்தவை சொரிய - ஆடையிற் சூழ்ந்த மணிமேகலையில் அற்ற காசுகள் சிந்த; வஞ்சி நுண்இடை கவின்பெற வைகினன் - கொடி போன்ற நுண்ணிடை அழகுபெற (அவர்களுடன்) கூடியிருந்தனன். 
 | 
| 
    (வி - ம்.) அவசத்தாற் பிறந்த அனந்தர் நோக்கினை ‘நஞ்சு‘ என்றார். உடன் - எல்லாம். பஞ்சு : ஆடைக்குக் கருவி ஆகுபெயர். தனது நுண்மையால் ஊற்றின்பம் பெறாத இடை, மெய் புகுந்தாலொத்த முயக்கத்தாலே (அகநா. 110 : 365 : 7) ஊற்றின்பம் பெறும்படி வைகுதலின், ‘நுண்ணிடை கவின்பெற‘ என்றார். 
 | 
 ( 7 ) | 
|  2385 | 
அரிபொற் கிண்கிணி யணிகிளர் சிலம்பொடு சிலம்புந் |   |  
|   | 
திருவச் சீறடிச் செழுமலர்க் கொழுங்கயன் மழைக்க |   |  
|   | 
ணுருவ நுண்ணிடை யொளிமணி வருமுலை யுருவா |   |  
|   | 
ரெரிபொன் மேகலை யிலக்கணை கடிவினை நொடிவாம். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அரி பொன் கிண்கிணி அணிகிளர் சிலம்பொடு சிலம்பும் - பரல் அணிந்த பொன்னாலான கிண்கிணியும் அழகு பொருந்திய சிலம்பும் ஒலிக்கின்ற; திருசீறடிச் செழுமலர்க் கொழுங்கயல் மழைக்கண் - திருவையுடைய சிற்றடித் தாமரையையும், கொழுவிய கயலனைய மழைக் கண்களையும்; உருவ நுண்இடை - உருவத்தால் நுண்ணிய இடையையும்; ஒளிமணி வருமுலை - ஒளிரும் முத்தணிந்த வளரும் முலைகளையும்; உருஆர் எரிபொன் மேகலை - அழகுற்ற விளங்கும் பொன்னாலான மேகலையையும் உடைய; இலக்கணை கடிவினை மொழிவாம் - இலக்கணையின் மணவினையை இனி மொழிவோம். 
 | 
| 
    (வி - ம்.) திருவ : அ : அசை. 
 | 
| 
    அரி - பரல். “(அரி - ஐது) ஐதாகிய பொன்னாவது தகடு“ என்பர் நச்சினார்க்கினியர். திருவ : ஈற்றகரம் அசை. வருமுலை : வினைத்தொகை. உரு - அழகு. கடிவினை - மணத்தொழில். 
 | 
 ( 8 ) | 
|  2386 | 
ஆழி மால்கட லகன்பெருங் கேள்விக டுறைபோ |   |  
|   | 
யூழி னன்றியு முறுவினை யோரையின் முடிப்பான் |   |  
|   | 
சூழி யானையுந் துளங்குபொற் சிவிகையு முடையான் |   |  
|   | 
வேழ வேந்தற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆழி மால்கடல் அகன்பெருங் கேள்விகள் துறைபோய் - கரையையுடைய பெரிய கடல்போன்ற பெரிய 
 |