பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 136 

   இஞ்ஞாலம் என்றது இகழ்ச்சி. வாலிது - தூயதுமாம். ஞமன் - யமன்.

( 222 )

வேறு

 
252 குழற்சிகைக் கோதை சூட்டிக்
  கொண்டவ னிருப்ப மற்றோர்
நிழற்றிகழ் வேலி னானை
  நேடிய நெடுங்க ணாளும்
பிழைப்பிலாட் புறந்தந் தானும்
  குரவரைப் பேணல் செய்யா
திழுக்கினா ரிவர்கள் கண்டா
  யிடும்பைநோய்க் கிரைக ளாவார்

   (இ - ள்.) குழல்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப - தன் குழலிலே அவன் சிகையிலுள்ள மாலையைக் சூட்டிக் கைப்பற்றியவன் இருப்பவும்; மற்றுஓர் நிழல்திகழ் வேலினானை நேடிய நெடுங்கணாளும் - வேறோர் ஒளிதரும் வேலுடையவனைத் தேடிய நீண்ட கண்ணினை யுடையாளும்; பிழைப்பு இலாள் புறம் தந்தானும் - குற்றம் அற்ற மனைவியை மனத்தாற் கொள்ளாது விட்டவனும்; குரவரைப் பேணல் செய்யாது இழுக்கினார் - ஐங்குரவரையும் வழிபடாமல் தவறியவர்களும் ஆகிய; இவர்கள் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார் கண்டாய் - துன்பந்தரும் நோய்களுக்கு இரையாவார்கள் காண்.

 

   (வி - ம்.) [குழற்சிகை : மயிர் முடியும் ஆம்.]

 

   [தந்தானும் என்பதிலுள்ள]தரவு, 'செலவினும் வரவினும்' (தொல்.கிளவி.28) என்னும் பொதுச் சூத்திரத்தால் முடிக்க. குரவர் - அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன் [தமையன்] என ஐவர்.

( 223 )
253 நட்பிடைக் குய்யம் வைத்தான்
  பிறர்மனை நலத்தைச் சோ்ந்தான்
கட்டழற் காமத் தீயிற்
  கன்னியைக் கலக்கி னானு
மட்டுயி ருடலந் தின்றா
  னமைச்சனா யரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட்
  குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

   (வி - ம்.) நட்பிடைக் குய்யம் வைத்தான் - நட்பிலே வஞ்சித்தவனும்; பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் - பிறர் மனைவி