| முத்தி இலம்பகம் | 
1373  | 
 | 
  | 
|  2433 | 
நான்றபொன் மணிமாலை நகுகதிர்ப் பவளத்தூ |   |  
|   | 
ணூன்றின வொளிமுத்த மண்டபத் தொளிர்திங்கள் |   |  
|   | 
கான்றன கதிர்காய்த்தும் வட்டணைக் கதிர்முத்த |   |  
|   | 
மீன்றபொன் விதானத்தின் னீழலுய்த் திரீஇயினரே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பொன் மணிமாலை நான்ற - பொன் மாலையும் மணி மாலையும் தொங்கவிடப்பட்ட; நகுகதிர்ப் பவளத்தூண் ஊன்றின - விளங்கும் ஒளியையுடைய பவளத்தூண் நாட்டப்பட்ட; ஒளிமுத்த மண்டபத்து - ஒளி பொருந்திய முத்து மண்டபத்தே; ஒளிர் திங்கள் கான்றன கதிர் காய்த்தும் வட்டணை - விளங்குத் திங்கள் உமிழ்ந்தனவாகிய கதிரைத் தான் எறிக்கும் வட்ட அணையிலே; கதிர்முத்தம் ஈன்ற பொன் விதானத்தின் நீழல் - ஒளியுறும் முத்துக்களைப் பதித்த பொன் விதானத்தின் நீழலிலே; உய்த்து இரீ இயினர் - அவளைக் கொண்டு சென்று இருத்தினர். 
 | 
| 
    (வி - ம்.) மாலை நான்ற தூண்; பவளத்தூண் என இயைக்க ஊன்றின - ஊன்றப் பட்ட கான்றனவாகிய கதிர் என்க. 
 | 
( 56 ) | 
|  2434 | 
மையணி மதயானை மத்தக வகலல்கு |   |  
|   | 
னெய்யணி குழன்மாலை நிழலுமிழ் குழைமங்கை |   |  
|   | 
மெய்யணி கலன்மாலை மின்னிருந் துகிலேந்திக் |   |  
|   | 
கையணி குழன்மாலைக் கதிர்முலை யவர்சூழ்ந்தார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கைஅணி குழல்மாலைக் கதிர் முலையவர் - கையாலணிந்த குழலையும் மாலையையம் ஒளிரும் முலையையும் உடைய மகளிர்; மெய் அணிகலன் மாலைமின் இருந்துகில் ஏந்தி - மெய்யில் அணியும் கலன்களையும் ஒளிவீசும் துகிலையும் ஏந்தி; மைஅணி மதயானை மத்தக அகல் அல்குல் - அஞ்சனம் அணிந்த மதகளிற்றின் மத்தகம் போன்ற அகன்ற அல்குலையும்; நெய்அணி குழல் மாலைநிழல் உமிழ்குழை மங்கை - நெய்பூசிய குழலையும் மாலையையும் ஒளியுமிழுங் குழையையும் உடைய மங்கையை; சூழ்ந்தார் - சூழ்ந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) கையணி : கைசெய்யப்பட்ட என்றுமாம். 
 | 
| 
    மத்தகம் போலும் அகலல்குல் என்க. நிழல் - ஒளி. மங்கை : இலக்கணை. முலையவர் : பணிமகளிர். 
 | 
( 57 ) | 
|  2435 | 
அவ்வளை யவிராழிக் கால்பொலிந் தழகார்ந்த |   |  
|   | 
மைவிளை கழுநீர்க்கண் விலாசியு மணியல்குற் |   |  
|   | 
கைவளை யலங்கார மாலையுங் கமழ்கோதை |   |  
|   | 
நைவள மிகுசாய னங்கையைப் புனைகின்றார். |   | 
 
 
 |