பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1384 

மேல் அணங்க! - அரும்பி மலரும் மலர்மேல் வாழுந் திருவே !; மழலை அன்னமே! - மழலைமொழியும் அன்னமே!; சுரும்புஆர் சோலை மயிலே! வண்டுகள் பொருந்திய சோலையிலுள்ள மயிலே!; குயிலே !-; சுடர் வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய்! - ஒளி வீசும் பேரணிகலன் புனைந்த வேந்தற்கு மகளே!; பூவாய்! - பூவையே!; பிணைமானே! - பெண்மானே!

   (வி - ம்.) அடுத்த செய்யுளுடன் இஃது ஒரு தொடர்.

   கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாயிருத்தலின், கரும்பு. நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு இயற்றலின், தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியுங் கொடுத்தலின், அமிர்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றுவித்தலின், யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின், திரு. நடையால், அன்னம், சாயலால். மயில். காலமன்றியும் கேட்டோர்க்கு இன்பஞ் செய்தலின், குயில். மன்னன் மகளே யென்றல் புகழன்மையின், மன்னன் பாவாயென்றது. அவன் கண்மணிப் பாவை யென்பதுணர்த்திற்று : இனி, இவள் கொல்லிப் பாவையல்லள் மன்னன் பாவை என்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின், பூவை. நோக்கத்தால். மான்.

   நச்சினார்க்கினியர் 'மழலை மணியாழ்' என்று கூட்டுவர்.

( 76 )
2454 அம்மெல் லனிச்சம் மலரு மன்னத் தூவியும்
வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் னிலவப் பூம்போ தனநின் னடிபோற்றி
இம்மென் கலையா ரிடுவென் றேத்த வொதுங்கினாள்.

   (இ - ள்.) அம்மெல் அனிச்ச மலரும் அன்னத் தூவியும் - அழகிய மென்மையான அனிச்சமலரும் அன்னத்தின் தூவியும்; வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத - வெம்மை தரும் என்று அச்சுற்று மெல்லெனவும் மிதியாத ; பொன்என் இலவப்பூம்போது அனநின் பொன் அடி போற்றி இடு என்று - வண்டுகள் பொம்மென முரலும் இலவ மலர்போன்ற நின் அழகிய அடியைப் பேணி எடுத்து வைப்பாயாக என்று கூறி; இம்என் கலையார் ஏத்த - இன்என ஒலிக்கும் மணிமேகலை அணிந்த மகளிர் பலரும் போற்ற; ஒதுங்கினாள் - அவளும் நடந்தாள்.

   (வி - ம்.) ”அனிச்சமு மன்னத்தின் தூவியு மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்”

   என்றார் வள்ளுவனாரும் : (1120) இம் மென்னும் - ஒலிக்குறிப்பு. கலை - மேகலையணி. ஒதுங்கல் - நடத்தல்.

( 77 )
2455 தூமாண் டுமக் குடமா யிரமாய்ச் சுடர்பொற்றூண்
டாமாயிரமாய்த் தகையார் மணித்தூ ணொருநூறாய்ப்
பூமாண் டாமத் தொகையாற் பொலிந்த குளிர்பந்தர்
வேமா னியர்தம் மகளின் விரும்ப நனிசோ்ந்தாள்.