பக்கம் எண் :

பதிகம் 14

யாகக்கொண்டு துயிலும் அழகிய சாரலைக் கடந்து ; மை நாகவேலி மலிபல்லவ தேயம் நண்ணி - முகில் உறங்கும் மலையை வேலியாக உடைய வளமிகு பல்லவ நாட்டை அடைந்து ; கொய் நாகச்சோலை கொடி அந்நகர் புக்க ஆறும் - மலர்களைக் கொய்யும் புன்னைமரச் சோலையையும் கொடியையுமுடைய அதன் தலைநகராகிய சந்திராபம் என்னும் நகரிலே புகுந்தபடியும்

(வி - ம்.) மை - முகில், கொய்ந்நாகம் - புன்னை கொடிமாநகரும் பாடம். காந்தள் வடிவிற்கும் நிறத்திற்கும் உவமம்.

( 12 )
18 அத்தம் மனைய களிற்றந்நகர் மன்னன் மங்கை
முத்தம் முரிஞ்சு முகிழ்மென்முலை மின்ன னாளைப்
பைத்தங்கொர் நாகம் பனிமாமதி யென்று தீண்டச்
சித்தங் குழையற் கெனத்தீர்த்தவட் சோர்ந்த வாறும்,

(இ - ள்.) அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை - அத்தகிரி போன்ற யானையையுடைய , அந்த நகர் மன்னனின் மகளாகிய; முத்தம் உரிஞ்சும் முகிழ் மென்முலை மின் அன்னாளை - முத்துமாலை அசையும் அரும்பனைய மெல்லிய முலையையுடைய மின்னுக்கொடி போன்ற பதுமையை; அங்கு ஓர் நாகம் பைத்து பனி மா மதி என்று தீண்ட - அப் பொழிவிடத்தே ஓர் அரவு படம் விரித்துக் குளிர்ந்த பெரிய திங்களென்று (அவள் முகத்தைக் கருதி, அது மறுவுடைய திங்களன்மையின் கையிலே) தீண்டுதலால்; சித்தம் குழையற்க எனத்தீர்த்து அவள் சேர்ந்த ஆறும் - உளம் (வருந்திய உலோக பாலனை) வருந்தற்க என்று கூறி, (அவளுக்குற்ற நஞ்சினை) நீக்கி, அவளை மணந்தபடியும்;

(வி - ம்.) அத்தகிரி என்னும் வடமொழிச் சிதைவு விகாரமாயிற்று; அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (பாண்டிக்கோவை) என்றார் பிறரும். அங்கு (பைத்து அங்கு ஓர் நாகம்) எனக் கதையை உட்கொண்டு சுட்டினார். குழையற்க: விகாரம் (குழையற்க என : குழையற்கென: அகரம் : தொகுத்தல் விகாரம்).

( 13 )
19 பொற்பூண் சுமந்த புணர் மென்முலைக் கோடு போழ
நற்பூங் கழலா னிருதிங்க ணயந்த வாறுங்,
கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான
வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும்,

(இ - ள்.) நல்பூங் கழலான் - அழகிய பூவேலை செய்த வீரக்கழல் அணிந்த சீவகன் ; பொன்பூண் சுமந்த புணர் மென் முலைக்கோடு போழ - பொற்கலன் ஆகிய கிம்புரியைச் சுமந்த முலையாகிய இரு கொம்புகளும் உழ ; இரு திங்கள் நயந்த ஆறும் -