| முத்தி இலம்பகம் | 
1409  | 
 | 
  | 
|  2499 | 
உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ |   |  
|   | 
யிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர் |   |  
|   | 
வெருவி யோட விசும்பிற குலாவிய |   |  
|   | 
திருவிற் போற்புரு வங்க டிருத்தினான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஒள் நிறப் புள் - ஒள்ளிய நிறமுடைய சிச்சிலிப் பறவைக்கு; உருவச் செங்கயல் வெரீஇ - அழகிய செங்கயல்கள் அஞ்சி; இரியல் உற்றன போன்று - ஓடுக்கலுற்றன போல; இணைக் கண்மலர் வெருவி ஓட - இரண்டு கண்மலர்களும் அஞ்சி ஓட; விசும்பின் குலாவிய திருவில்போல - வானில் வளைத்த வானவில் போல; புருவங்கள் திருத்தினான் - புருவங்களைத் திருத்தினான் 
 | 
| 
    (வி - ம்.) 'கண்கள் அஞ்சி பார்க்க வானில் வளைத்த திருவில்' என்பர் நச்சினார்க்கினியர். அவன் புருவந் திருத்தினபோது கண்கள் அஞ்சின என்றவே தக்கது. 
 | 
( 122 ) | 
|  2500 | 
ஆர மின்ன வருங்குயந் தான்களைந் |   |  
|   | 
தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழி |   |  
|   | 
னீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான் |   |  
|   | 
றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தாரன மாலைத் தயங்கு இணாக் கண்ணியான் - தாரணிந்தவனும் மாலையாக விளங்கும், பூங்கொத்துக் கலந்த கண்ணியனும் ஆகிய நாவிதன்; ஆரம் மினன அருங்குளம்தான் களைந்து - மாலை ஒளிர, அரிய மயிர்க் கத்தியை நீக்கி ஒண்திறல் கத்தரிகைத் தொழில் நீரின் செய்து - ஒள்ளிய திறலையுடைய கத்தரிகையாற் செய்யுந் தொழிலை ஒழுங்குறச் செய்து; அடி ஏத்துபு நீங்கினான் அடியை வணங்கிச் சென்றான 
 | 
| 
    (வி - ம்.) குயம் - ஈண்டு மயிர்க்கத்தி. ஓரும் : அசை. கத்தரிகையாற் செய்யும் தொழில் என்க. நீரின் - நீர்மையால். ஏத்துபு - ஏத்தி; தொழுது. கண்ணியான் - நாவிதன். 
 | 
( 123 ) | 
வேறு
 | 
|  2501 | 
அன்னப் பெடைநடுக்கி யசைந்து |   |  
|   | 
  தேற்றா நடையாளு |   |  
|   | 
மன்னர் குடைநடுக்கும் மாலை |   |  
|   | 
  வெள்வேன் மறவோனு |   |  
|   | 
மின்னு மணிக்குடத்தின் வேந்த |   |  
|   | 
  ரேந்தப் புனலாடிப் |   |  
|   | 
பொன்னங் கடிமலருந் துகிலுஞ் |   |  
|   | 
  சாந்தும் புனைந்தாரே. |   | 
 
 
 |