| முத்தி இலம்பகம் |
1420 |
|
|
| 2517 |
லருநிறக் குருசின் மார்பத் | |
| |
தசைந்தன ளலங்கல் வேலு | |
| |
நெரிபுறத் தடற்று வாளு | |
| |
நீலமு நிகர்த்த கண்ணாள். | |
|
|
(இ - ள்.) அலங்கல் வேலும் நெரிபுறத் தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள் - அலங்கலையுடைய வேலையும் சருச்சரைப்பட்ட புறத்தையுடைய உறையிலிருக்கும் வாளையும் நீல மலரையும் போன்ற கண்ணாள்; திருநிறக் காம வல்லி - அழகிய நிறமுடைய காமவல்லி; திருக்கவின கொண்டு பூத்து - திருவின் அழகைக் கொண்டு மலர்ந்து; பெருநிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததேபோல் - நன்னிறத்துடன் அழகுற்ற நிறைந்த கற்பகத்தைப் பிணைந்ததைப் போல; அருநிறக் குரிசில் மார்பத்து அசைந்தனள் - அரிய நிறமுடைய சீவகன் மார்பிலே அசைத் தானே துயின்றாள்.
|
|
(வி - ம்.) 'நெரிவுற்ற தடத்து வாழும்' என்ற பாடத்திற்கு, 'நெரிவுற்ற நீலம்' எனப் பொருள் கூறுக; வலிய அலர்த்தின நீலம் எனல் வேண்டும்.
|
( 140 ) |
வேறு
|
| 2518 |
மணிக்கண் மாமயிற் சாயன் மாதரு | |
| |
மணிக்கந் தன்னதோ ளரச சீயமும் | |
| |
பிணித்த காதலாற் பின்னிச் செல்வழிக் | |
| |
கணித்த நாள்களேழ் கழிந்த காலையே. | |
|
|
(இ - ள்.) மணிக்கண் மாமயில் சாயல் மாதரும் - நீலமணிக் கண்களையுடைய மயிலனைய சாயலையுடைய இலக்கணையும்; அணிக்கந்து அன்னதோள் அரச சீயமும் - அழகிய தூண் போன்ற தோளையுடைய, மன்னர்க்குச் சிங்கம் போன்ற சீவகனும்; பிணித்த காதலால் பின்னிச் செல்வுழி - யாப்புற்ற காதலாலே பிணைந்து செல்கையில்; கணித்த நாள்கள் ஏழ்கழிந்த காலை - அறுதியிட்ட நாட்கள் ஏழுங்கழிந்த எட்டாம் நாளிலே,
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
|
மணி - நீலமணி. கண் - புள்ளி. மாதர் : இலக்கணை. அணிக்கந்து - அழகிய தூண். சீயம் - சிங்கம்; என்றது சீவகனை. கணித்த - குறிக்கப்பட்ட. ஏழும் எனல் வேண்டிய முற்றும்மை தொக்கது.
|
( 141 ) |
| 2519 |
சூட்டுஞ் சுண்ணமு மணிந்து சுந்தர | |
| |
மோட்டி யொண்பொனூ லோங்கு தாரொடு | |
| |
பூட்டிக் குண்டலம் பொற்பப் பெய்தபின் | |
| |
மோட்டு முத்தொளிர் வடம்வ ளாயினார். | |
|