| முத்தி இலம்பகம் |
1422 |
|
|
|
(வி - ம்.) சுநந்தைகள் - தன் : அசை. மகன் - சீவகன். இலிற்றும் - பிலிற்றும். அநந்தன் - ஆதிசேடன். இது யானைக் கையினுக்குவமை. சாமரை குனிந்த என மாறுக. குனிந்த - வீசின. குளிர் சங்கு : வினைத்தொகை.
|
( 144 ) |
வேறு
|
| 2522 |
இரும்பிடி நூறு சூழ | |
| |
விறுவரை நின்ற தேபோற் | |
| |
கரும்பொடு காய்நெற் றுற்றிக் | |
| |
கருப்புரக் கந்தி னின்ற | |
| |
சுரும்புசூழ் மதத்த சூளா | |
| |
மணியெனுஞ் சூழி யானைப் | |
| |
பெருந்தகைப் பிணையன் மன்னர் | |
| |
முடிமிதித் தேறி னானே. | |
|
|
(இ - ள்.) இரும்பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல் - கரிய பிடிகள் நூறு சூழ, பெரிய மலை நின்றதைப்போல; கரும்பொடு காய்நெல் துற்றி - கரும்பையும் காய்த்த நெல்லையும் உண்டு; கருப்புரக் கந்தில் நின்ற - கருப்பூரம் அணிந்த தூணிலே கட்டப்பட்டு நின்ற; சுரும்புசூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை - வண்டுகள் மொய்க்கும் மதத்தையுடைய சூளாமணி என்னப்படும் முகபட்டத்தையுடைய யானையை; பெருந்தகைப் பிணையல் மன்னர் முடிமிதித்து ஏறினான் - பெருமை சான்ற மாலையணிந்த மன்னரின் முடியிலே காலை வைத்து எறினான்.
|
|
(வி - ம்.) சூளாமணி என்பது யானையின் பெயர் முற்செய்யுளில் யானையின் பெயரும் ஏறின முறையுங் கூறாமையின் இங்குக் கூறினார்.
|
( 145 ) |
| 2523 |
சட்டகம் பொன்னிற் செய்து | |
| |
தண்கதிர் வெள்ளி வேய்ந்து | |
| |
வட்டநல் வைரம் வாய்ப்ப | |
| |
நிறைத்துமேன் மணிகள் சோ்த்திச் | |
| |
சுட்டுதற் கரிய முத்தின் | |
| |
றொத்துவாய் நாற்ற முந்நீர்ப் | |
| |
பட்டவான் பவளக் காம்பின் | |
| |
குடைநிழற் பருதி யொத்தான். | |
|
|
(இ - ள்.) சட்டகம் பொன்னில் செய்து - சட்டம் பொன்னாலே செய்து; தண்கதிர் வெள்ளி வேய்ந்து - குளிர்ந்த கதிரையுடைய வெள்ளியாலே வேயப்பெற்று; நல் வைரம் வாய்ப்ப வட்டம் நிறைத்து - நல் வைரத்தாலே பொருந்த வட்டத்தை
|