| முத்தி இலம்பகம் |
1425 |
|
|
| 2527 |
ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ | |
| |
ருலாமுகில் கிழிக்கு மாடக் | |
| |
கொள்கொடிக் குழாத்தி னாலுங் | |
| |
கொழுநறும் புகையி னாலுந் | |
| |
தௌ்ளுறு சுண்ணத் தாலுந் | |
| |
தேமலர்த் துகளி னாலும் | |
| |
புள்ளினம் பொழுது காணா | |
| |
புலம்பிக்கூ டடைந்த வன்றே. | |
|
|
(இ - ள்.) ஒள் இலைச் சூலம் தௌ்நீர் உலாம் முகில் கிழிக்கும் மாடத்து - ஒள்ளிய இலையையுடைய சூலம் தெளிந்த நீர் பரந்த முகிலைக் கிழிக்கும் மாடத்திலே; கொள் கொடிக் குழாத்தினாலும் - கொண்ட கொடித்திரளாலும்; கொழுநறும் புகையினாலும் - வளவிய நல்ல அகிற் புகையினாலும்; தௌ்ளுறு சுண்ணத்தாலும் - தெளிந்த சுண்ணப் பொடியாலும்; தேன் மலர்த்துகளினாலும் - தேன் பொருந்திய பூந்துகளாலும்; புள் இனம் பொழுது காணா - பறவைத்திரள் கதிரவனைக் காணாமல்; புலம்பிக் கூடு அடைந்த - வருந்திக் கூட்டை அடைந்தன.
|
|
(வி - ம்.) கதிரவன் மறைதலிற் காணாமல் வருந்தின. 'தௌ்நீர் உலாம் முகில்' என்பது கடலிலே யுலாவும் முகில் என்றுமாம். உலாவும் என்பது 'உலாம்' என விகாரப்பட்டது.
|
|
கொள்கொடி : வினைத்தொகை. சுண்ணம் - நறுமணப் பொடி. மலர்த்துகள் - பூந்தாது. காணா - காணாதனவாய். புலம்பி - வருந்தி.
|
( 150 ) |
| 2528 |
பைந்தொடி மகளிர் பாங்கர் | |
| |
பரிந்துநூல் சொரிந்த காசு | |
| |
சிந்தின தழலென் றஞ்சிச் | |
| |
சிறையன்ன நிலத்தைச் சேரா | |
| |
விந்திர கோப மாமென் | |
| |
றிளமயில் குனிந்து குத்திச் | |
| |
சிந்தையிற் றேம்பத் தாமே | |
| |
திருமணி நக்க வன்றே. | |
|
|
(இ - ள்.) பைந்தொடி மகளிர் பாங்கர் பரிந்து - பைந்தொடி அணிந்த மகளிர் (ஊடியபோது கணவர் மேகலையைப் பற்றுதலால்) அது அற்று; நூல் சொரிந்த காசு - நூல் சொரிந்த மணிகள்; சிந்தின - சிந்தினவற்றை; தழல் என்று அஞ்சி -
|