பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1438 

என்று கருதி நின்று; வண்டு மூசி இமிரும் பல் மலர்க் கழுநீர் மொய் அலங்கல் தாழ - வண்டுகள் மொய்த்து முரலும் பல கழுநீர் மலர்களால் ஆன மாலை தாழ; காசு இல் காமம் கண்ணினான் செப்பி - தம் குற்றமற்ற காமத்தைக் கண்களாற் கூறி; இரப்பார் - வேண்டுவார் சில மகளிர்.

 

   (வி - ம்.) தேசிகம் - ஒளி. பாசம் - கயிறு. பல் கழுநீர் மலர் என்க. கழுநீர் மலர் அலங்கல் வண்டிமிரும் மொய்யலங்கல் என இயைக்க. காசு - குற்றம்.

( 172 )

2550 வண்டறைந்த தாரான் வண்ணங்கண்ட பின்றைக்
கண்டிலேனென் மாமை கைவளையொ டென்பா
ரொண்டொடி யிவன்றன் னுருவுகண்டு வாழ்வார்
பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர்போத வென்பார்.

   (இ - ள்.) வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றை - வண்டுகள் இசைக்கும் மாலையானின் அழகைக் கண்ட பிறகு; என் மாமை கைவளையோடு கண்டிலேன் என்பார் - என் மாமையையும் கைவளையையும் காண்கிலேன் என்பார் சில மகளிர்; ஒண்டொடி - ஒள்ளிய வளையலையுடையாய்!; இவன்தன் உருவு கண்டு வாழ்வார் - இவனுடைய உருவத்தைக் கண்டு வாழ்வாராகி; பெண்டிராய்ப் பிறந்தார் - பெண்களாய்ப் பிறந்தவர்கள்; போதப்பெரியர் என்பார் - மிகவும் மேன்மையுடையோர் என்பார் சில மகளிர்.

 

   (வி - ம்.) உருவுகண்டு வாழும் பெண்டிர் பெரியர் எனவே, யாமும் பெரியம் என்றாராம். மற்றும், உருவு கண்டு வாழ்வார் பெரியர் எனவே நுகரும் மகளிர் தவத்தால் மிகப் பெரியரென்றும் அத்தகைய தவத்தை யாமும் செய்தல் வேண்டும் எனவும் கூறினாராயிற்று.

( 173 )

வேறு

 
2551 கொழித்திரை யோத வேலிக்
  குமரனைப் பயந்த நங்கை
விழுத்தவ முலக மெல்லாம்
  விளக்கிநின் றிட்ட தென்பார்
பிழிப்பொலி கோதை போலாம்
  பெண்டிரிற் பெரிய ணோற்றாள்
கழித்துநின் றறாத கற்பிற்
  சுநந்தையே யாக வென்பார்.

   (இ - ள்.) கொழித்து இரை ஓத வேலி - முத்து முதலியவற்றைக் கொழித்து ஆரவரிக்கும் கடல் சூழ்ந்த உலகிலே;