பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1439 

குமரனைப் பயந்த நங்கை விழுத்தவம் - சீவகனைப் பெற்ற விசயையின் சிறந்த தவம்; உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார் - உலகமெங்கும் விளக்கி நிலைபெற்றது என்பர் சில மங்கையர்; பிழிப்பொலி கோதைபோலாம் பெண்டிரில் பெரியன ஆக நோற்றாள் - தேன்பிழியையுடைய கோதையைப் போன்ற பெண்களிற் பெரியளாக நோற்றவள்; சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே என்பார் - நிலையாக நின்று நீங்காத கற்பினை யுடைய சுநந்தையே என்பார்.

   (வி - ம்.) சுழித்தல் வேறிடத்தின்றி நிற்றல். அறாத கற்பு - அருட் கற்பு.

   ஓதவேலி : அன்மொழித்தொகை : உலகம். குமரன் : சீவகன். பயந்த நங்கை என்றது விசயையை. பிழி - தேன். பெரியளாக நோற்றவள் என்க.

( 174 )
2552 சாந்தகங் கிழிய மாலைத்
  தடமுலை ஞெமுங்கப் புல்லிச்
சோ்ந்தெழு நங்கை மாரே
  திருநங்கை மார்க ளல்லார்
கூந்தலு முலையு முத்துங்
  கோதையுஞ் சுமந்து நைவான்
போந்தவந் நங்கை மார்கள்
  பொய்ந்நங்கை மார்க ளென்பார்.

   (இ - ள்.) சாந்து அகம்கிழிய மாலைத் தடமுலை ஞெமுங்கப் புல்லி - சாந்தை அணிந்த மார்பு கிழியும்படி மாலையணிந்த பெரிய முலைகள் அழுந்தத் தழுவி; சேர்ந்து எழும் நங்கைமாரே திரு நங்கைமார்கள் - கலந்து எழுகின்ற மாதர்களே நல்வினை செய்த மாதர்கள்; அல்லார் - மற்றைய மாதர்கள்; கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான் - கூந்தலையும் முலைகளையும் முத்தையும் மாலையையும் சுமந்து வருந்த; போந்த அந் நங்கைமார்கள் பொய்ந் நங்கைமார்கள் என்பார் - பிறந்த அம் மாதர்கள் பொய்யான மாதர்கள் என்றுரைப்பர்.

   (வி - ம்.) வடிவு மாத்திரையாய்ப் பயன் பெறாமையின், 'பொய்ந் நங்கைமார்கள்' என்றார். அகம் : ஆகம் என்பதன் விகாரம்.

( 175 )
2553 இடம்பட வகன்று நீண்ட
  விருமலர்த் தடங்க ணென்னுங்
குடங்கையி னொண்டு கொண்டு
  பருகுவார் குவளைக் கொம்பி