பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1447 

கொம்பினை அறுத்துச் செய்த மணிகள் இழைத்த கட்டிலில் அமர்ந்து; புலமகள் புகழப் பொய்தீர் பூமகள் புணர்ந்து? நாமகள் புகழக் குற்றம் அற்ற திருமகளைப் புணர்ந்து; வேந்தர் குழாத்திடை நிவந்து இருந்தான் - மன்னர் திரளினிடையே மேம்பட இருந்தான்.

   (வி - ம்.) 'நிவந்து' என்றார் அரசரில் தான் மேலாக இருத்தலின்.

( 189 )
2567 எத்துணைத் தவஞ்செய் தான்கொ
  லென்றெழுந் துலக மேத்த
வித்திய புகழி னாற்கு
  விருந்தர சியற்றி நாடு
மொத்தன னல்கித் தன்னை
  யுழந்தனள் வளர்த்த தாய்க்குச்
சித்திரத் தேவிப் பட்டந்
  திருமக னல்கி னானே.

   (இ - ள்.) எத்துணைத் தவம் செய்தான் கொல் என்று எழுந்து உலகம் ஏத்த - 'இவன் எவ்வளவு தவம் புரிந்தானோ' என்று எடுத்து உலகம் புகழ; வித்திய புகழினாற்கு - நட்ட புகழையுடைய கந்துக்கடனுக்கு; விருந்து ஒத்தனன் அரசு இயற்றி - புதிய அரசுரிமையை மனம் விரும்பி நல்கி; நாடும் நல்கி - நாட்டையும் கொடுத்து; தன்னை உழந்தனள வளர்த்த தாய்க்கு - தன்னை வருந்தி வளர்த்த சுநந்தைக்கு; சித்திரத் தேவிப்பட்டம் - நன்றாகிய தேவி என்னும் பட்டத்தையும்; திருமகன் நல்கினான் - சீவகன் கொடுத்தனன்.

   (வி - ம்.) 'அந்தணா ளர்க்கு அரசுவரைவின்றே' (தொல். மரபு. 82); என்பதனால், ஈண்டு அளித்தது குறுநில மன்னர்க்குரிய அரசாயிற்று ; 'முடியுடை வேந்தனாந்தன்மை வணிகனுக்கில்லையாதலின்' என்பர் நச்சினார்க்கினியர்.

( 190 )
2568 இனக்களி யானை மன்ன
  ரிளவுடை யானென் றேத்தத்
தனக்கிளை யானை நாட்டித்
  தான்றனக் கென்று கூறிச்
சினக்களி யானை மன்னர்
  மகளிரைச் சோ்த்தி நம்பன்
மனக்கினி துறைக வென்று
  வளங்கெழு நாடு மீந்தான்.