| 
    (வி - ம்.) நச்சினார்க்கினியர், மன்னர் மகளிரை மணம் புணர்த்தியதையும் நாடுகளை நல்கியதையும் நபுல விபுலர்க்குச் செய்தான் என்பர். செய்யுளிற் சிறிதும் அதற்கு இடமில்லை. 'மன்னர் மகளிரை' எனப் பன்மையாற் கூறியுள்ளாரே எனின், ஒருவன் பல பெண்களை மணத்தல் அக்கால இயல்பென்க. போரில் விபுலன் பட்டான் என்றும் நம்பன் என்றது நபுலனை யென்றும் அவனுக்கு மகளிரைச் சேர்த்தினான் என்றும் நச்சினார்க்கினியர்க்கு முன்னிருந்தோர் கூறுவதாகத் தெரிகிறது. இதனை, 'அன்றி, விபுலன் பட்டான் என்று கூறுவார் நம்பனென்றதனை, நபுலனுக்காக்கி அவனுக்கு மகளிரைச் சேர்த்தி என்ப' என்று கூறுவதாற் காண்க. 
 | 
( 191 ) |