பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1449 

   (வி - ம்.) அருநிதியும் அரசும் எனினுமாம். மணியாழி என்றது அரசனாற் கொடுக்கப்படும் பட்டத்திற்கு அறிகுறியாகிய ஏனாதி மோதிரத்தை. தோழர் - பதுமுகன் முதலியோர்.

( 192 )
2570 வளர்த்தகைத் தாயர் தம்மை
  வருகென வருளித் தங்கள்
கிளைக்கெலாஞ் சிறப்புச் செய்து
  கேட்டவர் மருள வைந்தூர்
விளைத்துள கெடாத வைக
  லாயிர மிறுப்புத் தண்டக்
கொளக்கொடுத் தயா வுயிர்த்தான்
  கொற்றவ னென்ப வன்றே.

   (இ - ள்.) வளர்த்த கைத் தாயர் தம்மை - தன்னை வளர்த்த செவிலித்தாயர்களை; வருக என அருளி - வருக என்று அழைத்து; தங்கள் கிளைக்கு எலாம் சிறப்புச் செய்து - அவர்களுடைய உறவினர்க்கெல்லாம் சிறப்பு நல்கி; கேட்டவர் மருள - கேட்டோர் மயங்கும்படி; ஐந்து ஊர் - ஐந்தூர்களை; விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கொளக்கொடுத்து - உலகில் விளைதற்குள்ளனவற்றை யெல்லாம் விளை வித்துக் கெடாத, நாடோறும் ஆயிரம் பொன் இறுப்புத்தண்டத் தக்கவாகக் கொள்ளும்படி கொடுத்து; கொற்றவன் அயாவுயிர்த் தான் - அரசன் இளைப்பாறினான்.

   (வி - ம்.) என்ப : அன்று ஏ : அசைகள்.

   கைத்தாயர் - செவிலித்தாயர். தங்கள் என்றது அவர்கள் என்னும் சுட்டுப்பொருட்டாய் நின்றது. உள விளைத்துவைகல் ஆயிரம் இறுப்புத் தண்டக் கெடாத ஊர் ஐந்து கொடுத்து என இயைக்க. கொற்றவன் : சீவகன்.

( 193 )
2571 கைத்தல மந்தி கொண்ட
  கைமகப் போன்று தன்கட்
பத்திமை விடாது மேனாட்
  படைக்கல நவின்ற பொற்றோ்
மைத்துன மன்னர்க் கெல்லாம்
  வளநிதி மணிசெய் மான்றோ்
தத்துநீர் மிசைச்சென் மாவுந்
  தவழ்மதக் களிறு மீந்தான்.

   (இ - ள்.) மந்தி கைத்தலம் கொண்ட - மந்தியைக் கையாலே தழுவிக் கொண்ட; கைமகப் போன்று - ஒழுக்கத்தை