பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1474 

வாய் வைத்து; மலாந்து நீண்டு உறைகின்ற ஓடு அரிக்கண் - மலர்ந்து நீண்டு வாழ்கின்ற செவ்வரியோடுகின்ற கண்களை யுடைய; உருவக்கொம்பின் எண்மரும் - அழகிய மலர்க்கொம்பு போன்ற எண்மரும்; இறைவி அடிபணிய - விசயையின் அடியைப் பணி; திரு அன்னாள் - திருமகள் அனைய அவள்; எடுத்துப் புல்லி - (அவர்களை) எடுத்துத் தழுவி; உலகு ஆளும் சிறுவர்ப் பயந்து - உலகு காக்கும் மக்களைப் பெற்றுப்(பின்); இறைவன் தெளிவீர் என்றாள் - அருகனைத் தெளிமின் என்றுரைத்தாள்.

   (வி - ம்.) எனவே, இருமைக்கும் பயன் கூறினாள். முன்பு திருவனையாள் என்க. ”சிறுவர்களில் நால்வர் உலகாளுதற்குரிரயல்லரேனும் தம் குலத்தொழிற்கேற்ப உலகாளுதற்குரியரென்பது பற்றி, 'உலகாளும் சிறுவர்' என்றாள். 'மெய்தெரிவகையின் எண்வகை உணவின் (தொல். மரபு. 78) எனவும், 'கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே' (தொல். மரபு. 79) எனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுது பயன் கோடலும், அரசன் கொடுத்த சிறப்புக்களும் மன்றித் தன் புதல்வராதலின், அரசாட்சி முதலியன கொடுப்ப, அவர் தாமும் தம் வழித்தோன்றினோரும் ஆள்வரென்றுணர்க” - என்பர் நச்சினார்க்கினியர்.

   'உலகு' என்னுஞ்சொல், மண்ணுலகம் முழுதுமே அன்றி அதன் கண் கூறுபட்ட நிலங்களையும் உணர்த்தும் என்பது, 'மாயோன் மேய காடுறை யுலகமும்' (தொல். அகத்திணை. 5)என்னுஞ் சூத்திரத்தான் உணர்க.

( 8 )
2607 பொங்கு மணிமுடிமேற்
  பொலிந்தெண் கோதைத் தொகையாகிக்
கங்குற் கனவகத்தே
  கண்ணுட் டோன்றி வந்தீர்நீ
ரெங்கும் பிரியற்பீ
  ரென்று கண்கண் மலர்ந்திருந்து
கொங்கு ணறும்பைந்தார்க்
  கோமா னிங்கே வருகென்றாள்.

   (இ - ள்.) நீர் கங்குல் கனவகத்தே - நீர் இரவிலே கனவகத்தே; பொங்கும் மணிமுடிமேல் - ஒளி பொங்கும் மணிமுடியின் மேல்; பொலிந்து எண் கோதைத் தொகையாகி - விளங்கி எட்டுப் பூமாலைத் திரளாய்; கண்ணுள் தோன்றி வந்தீர் - கண்களிலே வெளிப்பட்டு வந்தீர்; எங்கும் பிரியற்பீர் - (அத்தகைய நீர்) எவ்விடத்தும் பிரியாதிருப்பீர்; என்று கண்கள் மலர்ந்திருந்து - என்றுகூறி கண்கள் மலர நோக்கியிருந்து; கொங்கு உண் நறும் பைந்தார்க் கோமான்! இங்கே