பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1481 

   (வி - ம்.) ஈண்டு 'உமைத்துழிச் சொறியப் பெற்றாம்' என்பது விழுங்குதற்கு வாய்க்கொண்ட காலம் சிறிது பொழுது விழுங்காதிருக்கவும் பெற்றோமாதலின் ஈண்டுத் தவம் செய்து கோடுமென எழுந்த மனவெழுச்சிக் கண்ணே அதனை முற்ற முடித்துக் கொள்ளப் பெற்றே மென்றவாறாம்.

( 19 )
2618 கடுவளி புடைக்கப் பட்ட
  கணமழைக் குழாத்தி னாமும்
விடுவினை புடைக்கப் பாறி
  வீற்றுவீற் றாயி னல்லா
லுடனுறை பழக்க மில்லை
  யொழிமதி யத்தை காதல்
வடுவுடைத் தென்று பின்னு
  மாபெருந் தேவி சொன்னாள்.

   (இ - ள்.) கடுவளி புடைக்கப்பட்ட - கொடிய காற்றால் மோதப்பட்ட; கணமழைக் குழாத்தின் - திரளாகிய முகில் நிரைபோல; விடுவினை புடைக்க - தீவினை தாக்குதலால்; நாமும் பாறி வீற்றாயின் அல்லால் - நாமும் சிதறித் தனித்தனியே போவதல்லாது; உடன் உறை பழக்கம் இல்லை - ஓரிடத்திலே வாழும் பழக்கம் அதற்கு இல்லை; வடுவுடைத்து - (இத்தகைய) குற்றமுடையது (ஆதலால்); காதல் ஒழி - காதலை நீங்குவாயாக!; என்று - என்றுரைத்து; பின்னும் மாபெருந்தேவி சொன்னாள் - மேலும் விசயை கூறினாள்.

   (வி - ம்.) மதி, அத்தை : அசைகள்.

   வளி - காற்று. கணம் - திரள். விடுவினை - போகூழ். பாறி - சிதறி. மாபெருந்தேவி : விசயை.

( 20 )

வேறு

2619 யிருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக்
கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியு முன்னே
யருந்தவமுந் தானமு மாற்றுமினே கண்டீர்.
முருந்தனைய தூமுறுவன் முற்றிழையார் சேரி

   (இ - ள்.) முருந்து அனைய தூமுறுவல் முற்றிழையார் சேரி - மயிலின் இறகு அடியைப் போன்ற தூய முறுவலையுடைய அணிகல மணிந்த மகளிர் சேர்ந்த இடத்தே; இருந்து இளமைக் கள் உண்டு - இருந்து இளமையாகிய கள்ளைப் பருகி; இடை தெரிதல் இன்றி - அறம் முதலியவற்றை அறிதல் இன்றி; கருந்தலைகள் வெண்தலைகளாய்க் கழியும் முன்னே - கரிய