பக்கம் எண் :

                 
முத்தி இலம்பகம் 1496 

2646 அடிகளோ துறக்க வொன்று
  முற்றவர் யாது மல்லர்
சுடுதுய ரென்கட் செய்தாய்
  சுநந்தைநீ யௌவை யல்லை
கொடியைநீ கொடியை செய்தாய்
  கொடியையோ கொடியை யென்னா
விடருற்றோர் சிங்கந் தாய்மு
  னிருந்தழு கின்ற தொத்தான்.

   (இ - ள்.) அடிகளோ துறக்க - அடிகளோ துறவு பூண்க; ஒன்றும் யாதும் உற்றவர் அல்லர் - (ஏனெனில்) அவர் என்னிடம் ஒன்றும் இன்பமாதல் துன்பமாதல் யாதொன்றும் உற்றவர் அல்லர்; சுநந்தை! நீ ஒளவை - சுநந்தையே! நீயே என் அன்னை; கொடியை அல்லை - (இதற்குமுன்) நீ எவ்வகையினும் கொடியை அல்லை; என் கண் சுடுதுயர் செய்தாய் - (இப்போது துறந்தனை யாதலின்) இப்போது என்னிடம் சுடுதுயரைச் செய்தனை யாதலின்; கொடியை செய்தாய் - கொடியவற்றைச் செய்தனை; கொடியை கொடியை என்னா - கொடியை கொடியை என்று; ஓர் சிங்கம் இடர் உற்று - ஒரு சிங்கம் துன்புற்று; தாய்முன் இருந்து அழுகின்றது ஒத்தான் - தன் தாயின்முன் அமர்ந்து அழுவது போன்றான்.

 

   (வி - ம்.) அடிகளோ என்புழி ஓகாரம் பிரிநிலை. யாது ஒன்றும் உற்றவர் அல்லர் என இயைக்க. துன்பமாதல் இன்பமாதல் யாதொன்றும் உற்றவர் அல்லர் என்றவாறு. ஒளவையல்லை என்புழி எடுத்தோதி வினாவாக்கினும் அமையும்.

( 48 )
2647 சென்றதோ செல்க விப்பாற்
  றிருமக ளனைய நங்கை
யின்றிவ டுறப்ப யானின்
  னரசுவந் திருப்பே னாயி
னென்றெனக் கொழியு மம்மா
  பழியென விளங்கு செம்பொற்
குன்றனான் குளிர்ப்பக் கூறிக்
  கோயில்புக் கருளு கென்றாள்.

   (இ - ள்.) சென்றதோ செல்க - போனது போக; இப்பால் - இனி; திருமகள் அனைய நங்கை இவள் துறப்ப - திருமகளைப் போன்ற நங்கையாகிய இவள் துறக்கவும்; இன்று யான் நின் அரசு உவந்து இருப்பேன் ஆயின் - இப்போது நான் உன் அரசை