| முத்தி இலம்பகம் |
1504 |
|
|
|
கண் பிறழும்படி ஒதுங்கி : வெண்ணெயின் குழைந்து நிற்பார் ஆயினார் - வெண்ணெய்போலக் குழைந்து நிற்பார் ஆயினார்.
|
|
(வி - ம்.) வேற்கணார் சோர்வாரும் இரந்து நிற்பாரும் குழைந்து நிற்பாரும் ஆயினார் என்க. கண்ணி - தலையிற் சூடுமாலை. சுண்ணம் - நறுமணப்பொடி. தொழுதனர் : முற்றெச்சம்.
|
( 61 ) |
| 2660 |
கூந்தலை யொருகை யேந்திக் | |
| |
குங்குமத் தாரை பாயப் | |
| |
பூந்துகி லொருகை யேந்திப் | |
| |
புகுமிடங் காண்டல் செல்லார் | |
| |
வேந்தனைச் சரணென் றெய்த | |
| |
விம்முறு துயர நோக்கிக் | |
| |
காய்ந்துபொற் சிவிறி யேந்திக் | |
| |
கார்மழை பொழிவ தொத்தான். | |
|
|
(இ - ள்.) குங்குமத் தாரை பாய - தத்தையின் சிவிறி யால் குங்கும நீர்த் தாரை பாய்வதால்; கூந்தலை ஒருகை ஏந்திப் பூந்துகில் ஒருகை ஏந்தி - கூந்தலை ஒரு கையில் ஏந்தி, அழகிய துகிலை மற்றொரு கையில் ஏந்தி; புகும் இடம் காண்டல் செல்லார் - புகுமிடம் அறியாராய்; வேந்தனைச் சரண் என்று எய்த - அரசனை அடைக்கலம் என்று அடைய; விம்முறு துயரம் நோக்கி - அவர்களுடைய விம்மல் கொண்ட துயரத்தைப் பார்த்து; காய்ந்து - சினந்து; பொன் சிவிறி ஏந்தி - பொன் சிவிறியைக்கொண்டு; கார் மழை பொழிவது ஒத்தான் - முகில் மழைபெய்வது போன்றான்.
|
|
(வி - ம்.) தாரைபாயக் கூந்தலை ஒருகை யேந்தித் துகில் ஒருகையேந்தி என இயைக்க. தத்தை விட்ட குங்குமத்தாரை என்க. காண்டல் செல்லார் : ஒரு சொன்னீர்மைத்து. சரண் - அடைக்கலம்.
|
( 62 ) |
| 2661 |
வீக்கினான் றாரை வெய்தாச் | |
| |
சந்தனத் தளிர்நன் மாலை | |
| |
யோக்கினார் கண்ணி சுண்ண | |
| |
முடற்றினா ருருவச் சாந்திற் | |
| |
பூக்கமழ் துகிலுந் தோடு | |
| |
மாலையுஞ் சொரியப் போர்தோற் | |
| |
றாக்கிய வநங்கன் சேனை | |
| |
யாறலா றாயிற் றன்றே. | |
|
|
(இ - ள்.) சந்தனத் தளிர் நன்மாலை ஓக்கினார் - (அப்போது தத்தை சார்பினர்) சந்தனத் தளிரால் ஆகிய அழகிய மாலையால்
|