| முத்தி இலம்பகம் | 
1505  | 
 | 
  | 
| 
 அடித்தனர்; கண்ணி சுண்ணம் உருவச் சாந்தின் உடற்றினார் - கண்ணியாலும் சுண்ணதாலும் அழகிய சுண்ணப் பொடியாலும் எறிந்து அவனை வருத்தினார்; தாரை வெய்துஆ வீக்கினான் - (சீவகனும்) நீர்த் தாரையைச் சிவிறியாற் கடிதாக முறுக்கினான்; ஆக்கிய அநங்கன் சேனை - (அப்போது அப்போரை) உண்டாக்கிய காமன் சேனை; போர் தோற்று - போரிலே தோல்வி அடைந்து; பூக் கமழ்துகிலும் தோடும் சுண்ணமும் சொரிய - மலர் மணங்கமழும் ஆடையும் தோடும் சுண்ணப் பொடியும் சிதற; ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே - (கெட்டு) வழியல்லா வழிகளிலே சென்றது. 
 | 
| 
    (வி - ம்.) மகளிரெல்லாம் காமன் படையாதலின், தத்தை சேனையையும் 'அநங்கன் சேனை' என்றார். 
 | 
( 63 ) | 
|  2662 | 
அன்னங்க ளாகி யம்பூந் |   |  
|   | 
  தாமரை யல்லி மேய்வார் |   |  
|   | 
பொன்மயி லாகிக் கூந்தல் |   |  
|   | 
  போர்த்தனர் குனிந்து நிற்பா |   |  
|   | 
ரின்மலர்க் கமல மாகிப் |   |  
|   | 
  பூமுகம் பொருந்த வைப்பார் |   |  
|   | 
மின்னுமே கலையுந் தோடுங் |   |  
|   | 
  கொடுத்தடி தொழுது நிற்பார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அன்னங்களாகி அம்பூந் தாமரை அல்லி மேய்வார் - அன்னங்களைப்போல அழகிய தாமரை மலரையும் அல்லியையும் மேய்வார்கள்; பொன் மயில் ஆகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார் - அழகிய மயில் போலக் கூந்தலாற் போர்த்துக் கொண்டு தலை வணங்கி நிற்பார்கள்; இன்மலர்க் கமலம் ஆகிப் பூமுகம் பொருந்த வைப்பார் - இனிய தாமரை மலர்போலத் தம் முகத்தைப் பூவுடன் பொருந்த வைப்பார்கள்; மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடிதொழுது நிற்பார் - ஒளிரும் மேகலையையும் தோட்டையுங் கொடுத்து அடியைத் தொழுது நிற்பார்கள். 
 | 
| 
    (வி - ம்.) தோற்றவர் புல்லைக் கவ்வுதலுண்மையின் அல்லிமேய்வார் என்றார். மேகலையும் தோடும் திறையாக் கொடுத்து என்றவாறு. 
 | 
( 64 ) | 
|  2663 | 
பண்ணுரை மகளிர் மாலை |   |  
|   | 
  பைந்துகில் கவர்ந்து கொள்ளக் |   |  
|   | 
கண்ணுரை மகளிர் சோர்ந்து |   |  
|   | 
  காரிருட் டிவளு மின்போற் |   |  
|   | 
 
 
 |