பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1507 

வலியை அடுகின்ற சிவந்த குலிகத்தாரையை; முழுவலி முறுக்கல் உற்றான் - முழுவலியுடன் தாக்கத் தொடங்கினான்.

   (வி - ம்.) உடைய - தோற்ப, தத்தை : காந்தருவதத்தை. உறு வலி : சீவகன். அகலம் - மார்பு. சுணங்கு - தேமல். முழுவலி : அன்மொழித் தொகையுமாம்.

( 66 )
2665 மெய்ப்படு தாரை வீழி
  னோமிவட் கென்ன வஞ்சிக்
கைப்படை மன்ன னிற்பக்
  கதுப்பயன் மாலை வாங்கிச்
செப்பட முன்கை யாப்பத்
  திருமகன் றொலைந்து நின்றான்
பைப்புடை யல்கு லாளைப்
  பாழியாற் படுக்க லுற்றே.

   (இ - ள்.) மெய்ப்படு தாரை வீழின் இவட்கு நோம் என்ன அஞ்சி - மெய்யிற்படும் நீர்த்தாரை பட்டால் இவட்கு நோகும் என அஞ்சியவனாய்; கைப்படை மன்னன் நிற்ப - கைப்படையாகிய சிவிறியுடன் வேந்தன் நிற்க; கதுப்பு அயல் மாலை வாங்கி - கூந்தலில் உள்ள மாலையை எடுத்து; செப்பட முன்கையாப்ப - (அரசனுடைய) செவ்விய முன்கையைப் பிணிக்க; பைப்புடை அல்குலாளைப் பாழியால் படுக்கல் உற்று - பாம்புப் படத்தின் பக்கம் போன்ற அல்குலுடையாளை, வலிமையாற் கைப்படுக்க முயன்று; திருமகன் தொலைந்து நின்றான் - சீவகன் தோல்வியுற்று நின்றான்.

   (வி - ம்.) முலைமேற் படின் நோமென்றஞ்சி, மேய்யின்கண் வீச நின்றவன் மெய்யும் நோம் என அஞ்சினான். ஆகவே, தோற்றதாகக் கருதித் தத்தை மலர் மாலையால் அவன் கையைப் பிணித்தாள்.

( 67 )
2666 அடுத்தசாந் தலங்கல் சுண்ண
  மரும்புனல் கவர வஞ்சி
யுடுத்தபட் டொளிப்ப வொண்பொன்
  மேகலை யொன்றும் பேசா
கிடப்பமற் றரச னோக்கிக்
  கெட்டதுன் றுகின்மற் றென்ன
மடத்தகை நாணிப் புல்லி
  மின்னுச்சோ் பருதி யொத்தான்.

   (இ - ள்.) அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும்புனல் கவர - மெய்யிற் பூசிய சாந்தையும் சுண்ணப் பொடியையும்