| முத்தி இலம்பகம் |
1515 |
|
|
| 2682 |
அளிந்த தீம்பழ மிஞ்சி யார்ந்தநீர் | |
| |
விளைந்த வல்விளை வரிசி வேரியும் | |
| |
வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பக | |
| |
முளைந்து மல்லிகை யொலியல் சூடினார். | |
| |
|
|
(இ - ள்.) அளிந்த தீம்பழம் நீர் ஆர்ந்த இஞ்சி - அளிந்த இனிய எலுமிச்சம்பழ நீரிலே பொருந்திய செவ்விஞ்சியும்; அரிசி விளைந்த வல்விளைவு - அரிசி வலிய விளைவாக விளைந்த பொரி அவல் முதலியனவும்; வேரியும் .- மதுவும்; வளைந்த மின் அனார் மகிழ்ந்து - வளைந்த மின்னுக் கொடிபோன்றவர் மகிழ்ந்து (நுகர்ந்து); சண்பகம் உளைந்து - சிறு சண்பகத்தை வெறுத்து; ஒலியல் சூடினார் - மல்லிகை மாலையைச் சூடினார்.
|
|
(வி - ம்.) அரிசி வலிய விளைவாக விளைந்தவை பொரி, அவல் முதலியன. கருப்புக் கட்டி முதலிய பரலவுங் கூட்டி முறுகப் பொரித்தலின், வலிய விளைவாயிற்று.
|
|
இனி, பழமும் இஞ்சியும் நீரிலே நின்று விளைந்த வலிய விளைதலையுடைய அல்லி யரிசியென்றும் உரைப்ப
|
( 84 ) |
| 2683 |
தொத்து டைம்மலர்த் தொங்கல் கண்பொர | |
| |
முத்து டைம்முலைக் கண்க ணொந்தவென் | |
| |
றெய்த்த டிச்சிலம் பிரங்கு மின்குரல் | |
| |
கைத்தெ டுத்தலிற் காமந் தாழ்ந்ததே. | |
| |
|
|
(இ - ள்.) தொத்து உடை மலர்த் தொங்கள் கண்பொர - கொத்தாக உள்ள மலர் மாலை முலைக்கண்களைத் தாக்கலால்; முத்து உடை முலைக்கண்கள் நொந்த என்று - முத்துக்களையுடைய அம் முலைக்கண்கள் நொந்தன என்று (முன்னர்க்) கூறி; அடிச் சிலம்பு எய்த்து இரங்கும் இன்குரல் - அடியிலுள்ள சிலம்புகள் இளைத்து ஒலிக்கும் இனிய குரலை; கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்தது - செலுத்தி எழுப்புதலாலே காம இன்பம் அக் காலத்தே தங்கியது.
|
|
(வி - ம்.) தொத்து - கொத்து. உடைம்மலர் எனவும் உடைம்முலை எனவும் ஈரிடத்தும், மகரம் வண்ணத்தால் விரிந்தது. தொங்கல் - மாலை. எய்த்து - இளைத்து. கைத்து - செலுத்தி.
|
( 85 ) |
| 2684 |
பொன்ப னிப்புறும் பொற்பி னார்நல | |
| |
மன்ப னித்தலை யணங்க வத்தலை | |
| |
முன்ப னித்தலை முழுது நீங்கிப்போய்ப் | |
| |
பின்ப னித்தலை பேண வந்ததே. | |
| |
|