பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1539 

   சீவகன். வருக்கை - பலாமரம். ஆங்கு ஓர் கடுவனைக் கண்டனன்; அக்கடுவன் மந்தியை விளித்தது என்க.

( 122 )
2721 அளித்திள மந்தி தன்னை
  யார்வத்தால் விடாது புல்லி
யொளித்தொரு பொதும்பர்ச் சோ்ந்தாங்
  கொருசிறை மகிழ்ச்சி யார்ந்து
தளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித்
  தம்மின மிரண்டுஞ் சோ்ந்த
களித்தலைக் கூட்டங் காதன்
  மந்திகண் டிருந்த தன்றே.

   (இ - ள்.) ஒரு பொதும்பர்ச் சேர்ந்து ஆங்கு ஒரு சிறை ஒளித்து - (அக்கடுவன்) ஒரு பொதும்பரை அடைந்து அதன் ஒரு பக்கத்திலே மறைவாக இருந்து; இள மந்தி தன்னை அளித்து ஆர்வத்தால் விடாது புல்லி - இளமந்தியை அதரித்து ஆவலுடன் விடாது தழுவி; மகிழ்ச்சி ஆர்ந்து - இன்பம் நிறைந்தபின்; தளிர்த்தலைப் பொதும்பர் நீங்கித் தம் இனம் இரண்டும் சேர்ந்த - தளிர் நிறைந்த அப் பொதும்பரை விட்டுத் தம் இனத்தை இரண்டும் அடர்ந்தன; களித்தலைக் கூட்டம் - களிப்புடைய அக் கூட்டத்தை; காதல் மந்தி கண்டிருந்தது - அக் கடுவனிடம் காதலையுடைய மந்தி கண்டிருந்தது.

   (வி - ம்.) ஒளித்து மறைவாகப் போய் என்க. பொதும்பர் - மரச்செறிவு. ஒருசிறை - ஒரு பக்கத்தே. இரண்டும் - அக்கடுவனும், மந்தியும்.

( 123 )
2722 பரத்தையர்த் தோய்ந்த மார்பம்
  பத்தினி மகளிர் தீண்டார்
திருத்தகைத் தன்று தெண்ணீ
  ராடிநீர் வம்மி னென்ன
வுரைத்ததென் மனத்தி லில்லை
  யுயர்வரைத் தேனை யுண்பார்
வருத்துங்காஞ் சிரமும் வேம்பும்
  வாய்க்கொள்வார் யாவர் சொல்லாய்.

   (இ - ள்.) பரத்தையர் தோய்ந்த மார்பம் திருத்தகைத்து அன்று - பரத்தையரைத் தழுவிய மார்பு தூய தன்மையது அன்று; பத்தினி மகளிர் தீண்டார் - (ஆகையால்) கற்புடைய மங்கையர் தீண்டமாட்டார்; நீர் தௌ நீர் ஆடி வம்மின் என்ன - நீர் தெளிந்த நீரிலே முழுகி வருவீர் என்று (அம்மந்தி)