| முத்தி இலம்பகம் |
1568 |
|
|
|
பொய்கைகளை விரும்பி நோக்கி; புக்குநீர் உண்ணல் உற்றால் புகுந்து அதில் நீரைப் பருகத் தொடங்கினால்; சீப்படு குழம்பதாகி - அது சீயாலுண்டான குழம்பாகையினாலே; செல்லல் உற்று - வருத்தமடைந்தவராய்; அந்தோ என்னக் கூப்பிடு குரலாய் - ஐயோ! என்று கூவும் குரலராய்; குறைப்பனைக் குழாங்கள் ஒத்து - தலைபோன பனைத்திரளை ஒத்து; நிற்பர் - நிற்பர்.
|
|
(வி - ம்.) 'அணிந்து' என்னும் பாடத்திற்குத் 'தோன்றும் ' என ஒருவினை வருவிக்க.
|
|
வேட்டு - விரும்பி. செல்லல் - துன்பம். அந்தோ : இரக்கக் குறிப்பு. குறிப்பனை- மடல் முதலியவாகிய தலைப்பகுதி அற்றுப்போன பனைமரம்.
|
( 174 ) |
| 2773 |
நறுமலர்த் தாம நான்று | |
| |
நானநீர் பிலிற்றும் பந்தர்க் | |
| |
குறுகலுங் குடநெய் பெய்த | |
| |
கொந்தழல் போன்று பொங்கிப் | |
| |
பறையல கனைய வெண்பாற் | |
| |
பசுங்கழற் குண்டு பைங்க | |
| |
ணுறுதுயர் நரகர் தம்மை | |
| |
யுருகச்சுட் டிடுங்க ளன்றே. | |
|
|
(இ - ள்.) பறையலகு அனைய வெண்பல் பசுங்கழல் குண்டு பைங்கண் உறுதுயர் நரகர் - பலகறையைப் போன்ற வெண்மையான பற்களையும், பசுங்கழல் போலும் ஆழமான பைங்கண்களையும் உடைய மிகுதுயர் கொண்ட நரகர்; நறுமலர்த் தாமம் நான்று - நறிய மலர் மாலைகள் தூக்கப் பெற்று; நானநீர் பிலிற்றும் பந்தர்க் குறுகலும் - கத்தூரி நீர்த்துனி துளிக்கும் பந்தரை (நீர் வேட்டுக்) குறுகின அளவிலே; குடநெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கி - குடநெய் சொரிந்த மிகுநெருப்பெனப் பொங்கி; தம்மை உருகச் சுட்டிடும் - அவர்களை உருகுமாறு கூட்டிடும்.
|
|
(வி - ம்.) 'பறையலகு' இக் காலத்துப் 'பலகறை' ஆயிற்று.
|
|
நான்று - தொங்கி. பிலிற்றும் - துளிக்கும். குண்டுகண் - உட்குழிந்த கண். உறுதுயர் - மிகுந்த துன்பம். சுட்டிடுங்கள் : ஒருசொல் கள் : அசை.
|
( 175 ) |
| 2774 |
வெந்துருக் குற்ற செம்பின் | |
| |
விதவையு ளழுத்தி யிட்டு | |
| |
மெந்திர வூச லேற்றி | |
| |
யெரியுண மடுத்துஞ் செக்கிற் | |
| |
சுந்தெழுந் தரைத்தும் போகச் | |
| |
சுண்ணமா நுணுக்கி யிட்டு | |
| |
மந்தரத் தனைய துன்பம் | |
| |
வைகலு முழப்ப மாதோ. | |
|