| முத்தி இலம்பகம் | 
1582  | 
 | 
  | 
13. தேவகதித் துன்பம்
 | 
|  2800 | 
திருவிற்போற் குலாய தேந்தார்த் |   |  
|   | 
  தேவர்தந் தன்மை செப்பிற் |   |  
|   | 
கருவத்துச் சென்று தோன்றார் |   |  
|   | 
  கானிலந் தோய்தல் செல்லா |   |  
|   | 
ருருவமே லெழுத லாகா |   |  
|   | 
  வொளியுமிழ்ந் திலங்கு மேனி |   |  
|   | 
பருதியி னியன்ற தொக்கும் |   |  
|   | 
  பன்மலர்க் கண்ணி வாடா. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திருவில்போல் குலாய தேன் தார்த் தேவர்தம் தன்மை செப்பின் - வான வில்லென விளங்கும் தேன் பொருந்திய மாலையணிந்த வானவரின் தன்மையை விளம்பின்; கருவத்துச் சென்று தோன்றார் - கருவிலே போய்ப் பிறவார்; கால் நிலம் தோய்தல் செல்லார் - கால் நிலத்திலே தோய்தலைப் பொருந்தார்; உருவமேல் - அவருருவைக் கூறின்; எழுதல் ஆகா - எழுதவியலாதன; ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி - அவர்களுடைய ஒளியைத் தோற்றி விளங்கும் நிறம்; பருதியின் இயன்றது ஒக்கும் - ஞாயிற்றினாலே அமைந்தது போன்றதாம்; பல்மலர்க் கண்ணி வாடா - அவர் அணிந்த பல மலர்க் கண்ணிகளும் வாடமாட்டா. 
 | 
| 
    (வி - ம்.) திருவில் - வானவில்; இது தாருக்குவமை. கருவத்து என்புழி அத்து, சாரியை. எழுதலாகாவாகும் என்க. பருதி - ஞாயிறு. 
 | 
| 
    தேவர் கருவிற்பிறவார், கானிலந்தோயப்பெறார், அவர் உருவம் எழுதவியலாத சிறப்புடையன. உடம்பு ஒளிமிக்கன; அவர் அணிந்த மாலைகள் பாடமாட்டா என்பதாம். 
 | 
( 202 ) | 
|  2801 | 
அங்கையு மடியு நோக்கிற் |   |  
|   | 
  றாமரை யலர்ந்த தொக்கும் |   |  
|   | 
பங்கய மனைய செங்கண் |   |  
|   | 
  பகுவொளிப் பவழஞ் செவ்வாய் |   |  
|   | 
செங்கதிர் முறுவன் முத்தின் |   |  
|   | 
  றெளிநகை திகழுஞ் செய்யாள் |   |  
|   | 
வெங்கடை மழைக்க ணோக்கி |   |  
|   | 
  வெய்துறத் திரண்ட வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அங்கையுங் அடியும் நோக்கின் தாமரை அலர்ந்தது ஒக்கும் - (அவர்களுடைய தேவியருக்கு) அழகிய கையை 
 |