பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1620 

   (வி - ம்.) இச் செய்யுளிலும், சிறையாவது, தான் நினைத்தவறொழுகுதலின்றிப் பிறர் நினைத்தவாறே ஒழுகும்படி காத்தல். இளம் பார்ப்புக் கிளையைப் பிரிந்திருந்து ஆற்றின் அருமை நோக்கி, 'அருஞ்சிறை' என்றார். என்றும்,

   ”ஈண்டுப் பார்ப்பைப் பிரித்ததற்குத் தானும் பிரிந்தும், அதனைச் சிறை செய்ததற்குத் தானுஞ் சிறைப்பட்டும் அத் தீவினை நுகர்ந்தான் என்று முன்னர்ப் பொருளுரைத்ததே தேவர்க்குக் கருத்தென்றுணர்க; என்னை? நீ இப் பார்ப்பைக் கட்டி வைத்ததனையுங் கேளென்று அவனை நோக்கி ஈண்டு அரசன் கூறாமையின்” என்றும் நச்சினார்க்கினியர் கூறுகின்றனர்.

( 269 )

வேறு

2868 அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய்
மறம்புரிகொ ணெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச்
செறும்பெரிய தீவினைகள் சென்றுகடி தோடி
யுறும்பெரிய துன்ப முயிர்க் கொலையும் வேண்டா

   (இ - ள்.) அலங்கல் அணி வேலோய்! - மாலை புனைந்த வேலோனே!; பெரிய தீவினைகள் கூறின் - பெரிய தீவினையின் இயலைக் கூறின்; மறம் புரிகொள் நெஞ்சம் வழியாப் புகுந்தது ஈண்டி - அவை பாவத்தை விரும்பிய நெஞ்சின் வழியாகப் புகுந்து திரண்டு; கடிது ஓடிச்சென்று செறும் - தம்மைச்செய்த வுயிரோடு விரைந்தோடிச்சென்று அதனைத் துன்புறுத்தும்; பெரிய துன்பம் உறும் - துன்புறுத்தும்பொழுது அது பெரிய துன்பம் உறும்; உயிர்க்கொலையும் வேண்டா - (ஆதலால்) அத்தீவினைக்கு அடியதாகிய உயிர்க்கொலையும் நுமக்கு வேண்டா; பெரிய அறம் - இஃது அறங்களுட் பெரிய அறம்.

   (வி - ம்.) தீவினைகள் கூறின் எனவும் உயிர்க்கொலையும் வேண்டா, இது பெரிய அறம் என்றும் இயைத்துக்கொள்க. சுட்டு வருவித்துக் கொள்க.

”ஒன்றாக நல்லது கொல்லாமை”

   என்றார் திருவள்ளுவனாரும் (323.) உயிரோடே ஓடி என்றும் அது உறும் என்றும் வருவித்தோதுக.

( 270 )
2869 மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்க
ளையமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு
மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர்
பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான்.

   (இ - ள்.) மெய்யுரை வையகத்து நின்ற புகழ் மன்னும் - மெய்யுரை கூறின் இவ்வுலகத்து நிலையான புகழ் பொருந்தும்;