பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1626 

காமத்தையும் பொருளையும் எண்ணி; அடும் மணி ஆவி நீப்பார் - அராவிய மணிபோன்று சிறந்த உயிரைப் (பாழே) போக்குவர்.

   (வி - ம்.) ‘அழலெழு தித்திய மடுத்த யாமை - நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாங்கு‘ (361) என்றார் அகத்திலும்.

   மணி - அழகு, மணிக்குவளை : உவமத்தொகை - கடுங் கண், மணிக்கயற்கண் என இயைக்க, மணிக்கயல்-அழகிய கயல்மீன். மணி ஆவி நீப்பார் என்றது, வீடு பெறுதற்குரிய மணியுயிரைப் பாழே போக்குவர் என்றவாறு. அடுமணி - அராவிய மணி என்க.

( 280 )
2879 வீறழி வினைசெய் காலன்
  வைரவாள் வலையிற் பட்டாற்
சாறழி குவளை மாலை
  யவரையுந் தனமு நீக்கி
யாறிழி வரையிற் றோன்று
  மறநனி நினைப்பர் செம்பொ
னேறெழி னெறியி னேறி
  யிருவிசும் பாளு நீரார்.

   (இ - ள்.) செம்பொன் ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார் - செவ்விய பொன் சிறந்த அழகிய நெற்றிலே சென்று பெரிய வானுலகை ஆளும் இயல்பினார்; வீறு அழி வினைசெய் காலன் வயிராவாள் வலையில் பட்டால் - கொலைவினை செய்கின்ற காலனுடைய வயிர வாள்போலே கொல்லும் வலையில் அகப்பட்டால்; சாறு அழி தனமும் குவளைமாலையவரையும் நீக்கி - விழாக் கொண்டாடுதலால் மிக்க பொருளையும் குவளை மாலையணிந்த மகளிரையும் விட்டு; ஆறிழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் - ஆறுகள் தோன்றி யிழிகின்ற மலைபோலத் தோன்றும் அறத்தை மிகவும் நினைப்பர்.

   (வி - ம்.) வீறழிந்த வினை : கொலைத்தொழில், பலகாலும் வெட்டினாலுங் கேடு இன்று என்பதனை நினைக்க ‘வைரவாள் ‘ என்றார். வலை : பிறப்பு. ‘ஆறழிகின்றவரை‘ என்றார் பயன்படுதலும் நிலைகுலையாமையும் நோக்கி. நெறி - தவம் ‘செம்பொன் நீரார்‘ என இயைத்துச் ‘சுவர்க்கத்தே செல்லும் பொன்னாகிய உயிரினையுடையார்‘ என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

( 281 )
2880 துன்னிமற் றறத்தைக் கேட்டே
  துகினெருப் புற்ற தேபொன்
மின்னுத்தார் மார்பன் மெய்வெந்
  தாலியி னுருகிப் பெண்பா
லன்னப்பார்ப் பன்று கொண்ட
  தடத்திடை விடுவித் திட்டான்
பின்னைத்தன் கிளைகள் கூட்டம்
  பெருந்தகை வித்தி னானே.