பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1628 

பாவத்தையும் இது இவ்வாறு பெரியதாந் தன்மையுடையது என்றும் அஞ்சி; பிறவி நோய் வெருவினான் - (இவற்றை யெல்லாமுடைய) பிறவிப் பிணியை எண்ணி அஞ்சினான்.

   (வி - ம்.) முது புண் : ஒடு என்பர்.

   முதுபுண் என்பதற்கு ஒடு என்றனர் நச்சினார்க்கினியர். தீர்ப்பான் : வினையெச்சம். தன்னிளைமையோடு ஒப்புடைய காமம். உவர்ப்பு - வெறுப்பு. இப்படித்து - இத்தன்மைத்து என்றவாறு. இவற்றையெல்லாம் உடைய பிறவிநோய் என்பதுபடநின்றது. அவனது இளமையைத் தெரித்தோதுவர் ‘நல்லார் வாய்க்கொண்ட அமுதமொப் பான்‘, என்றார்.

( 283 )
2882 ஆளியாற் பாயப் பட்ட
  வடுகளி யானை போல
வாளிவிற் றடக்கை மைந்தன்
  வாய்விட்டுப் புலம்பிக் காம
நாளினு நஞ்சு துய்த்தே
  னச்சறை யாக நன்பொற்
றோளியர்த் துறந்து தூய்தாத்
  தவஞ்செய்வ லடிக ளென்றான்.

   (இ - ள்.) ஆளியால் பாயப்பட்ட அடுகளி யானைபோல - ஆளியென்னும் விலங்காற் பாயப்பட்ட, கொல்லும் மதமுடைய யானையைப்போல; வாளி வில் தடக்கை மைந்தன் வாய்விட்டுப் புலம்பி - அம்பையுடைய வில்லேந்திய நீண்ட கையானாகிய யசோதரன் வாய்விட்டழுது; நஞ்சு அறையாகக் காம நஞ்சு நாளினும் துய்த்தேன் - நஞ்சிற்கு ஓர் இருப்பிடமாகக் காமமாகிய நஞ்சினை நாள்தோறும் நுகர்ந்தேன்; அடிகள்! - அடிகளே!; நன் பொன் தோளியர்த் துறந்து தூய்து ஆ தவம் செய்வல் என்றான் - அழகிய பொன்னணி புனைந்த தோளியரை நீங்கித் தூயதாகத் தவத்தைச் செய்வேன் என்றான்.

   (வி - ம்.) ‘துய்த்தேன் என்று யானை போலப் புலம்பித் தவஞ் செய்வல் அடிகள் என்றான்‘ எனக்கூட்டுவர் நச்சினார்க்கினியர். தவஞ்செய்தலே தன்கருமமாதலின் தவஞ்செய்வல் எனத் துணிந்தனன் என்பதாம்.

( 284 )
2883 சிறுவன்வாய் மொழியைக் கேட்டே
  தோ்மன்னன் றானுஞ் சொன்னா
னுறுகளிற் றுழவ மற்றுன்
  னொளிமுடித் தாய மெய்தி