பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1637 

வேறு

2897 வெள்ளெயிற் றரவு மேய்ந்த
  மிச்சிலின் மெலிந்து மேகப்
புள்வயிற் பிறந்த புட்போ
  லொன்றலா துரைத்த றேற்றார்
கள்வயிற் றலர்ந்த கோதைக்
  கலாபவில் லுமிழு மல்கு
லொள்ளெயிற் றவர்கள் பொன்பூத்
  தொளிமணி யுருவ நீத்தார்.

   (இ - ள்.) மேகப் புள்வயின் பிறந்த புள்போல் - வானம்பாடி முகிலிடத்துப் பிறந்த துளியையே விரும்பிப் பாடுமாறு போல; ஒன்று அலாது உரைத்தல் தேற்றார் - அரசன் உள்வயின் பிறந்த அளியொன்றும் அல்லாதவற்றை உரைத்தலறியாதவர்களாகிய; கள் வயிற்று அலர்ந்த கோதை - தேனை வயிற்றிலே மலர்ந்த மாலையினையும்; கலாப வில் உமிழும் அல்குல் - கலாபத்தின் ஒளி உமிழப்பெற்ற அல்குலையும்; ஒள் எயிற்றவர்கள் - ஒளி பொருந்திய முறுவலையும் உடைய அரசியர்; வெள்எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து - வெண்மையான பற்களையுடைய பாம்பினால் உண்ணப்பட்ட திங்கள் போல ஒளி கெட்டு; பொன் பூத்து - பசந்து; ஒளி மணி உருவம் நீத்தார் - ஒளியையுடைய மணிகளின் உருவைக் கைவிட்டார்.

   (வி - ம்.) மேகப்புள் - வானம்பாடி.

   அரவு மேய்ந்த மிச்சில் என்றது - பாம்பால் விழுங்கப்பட்டு ஒளி மங்கிய திங்களை. மேகப்புள் - வானம்பாடி, மேகப்புள் அம்மேகத்து வயிற்பிறந்த ஒன்றலாது உரைத்தல் தேற்றாதன்றே அப்புள்போல அரசனிடத்துப் பிறந்த ஒன்றலாது உரைத்தல் தேற்றார் என்பது கருத்தாகக் கொள்க. மேகத்துப் பிறந்த ஒன்றென்றது துளியை; அரசனிடத்துப் பிறந்த ஒன்றென்றது அன்பினை என்க.

( 299 )
2898 கிளிச்சொலி னினிய சொல்லார்
  கிண்கிணி சிலம்பொ டேங்கக்
குளித்துநீ ரிரண்டு கோலக்
  கொழுங்கயல் பிறழ்ப வேபோற்
களித்துநீர் சுமந்து வாட்கண்
  கலாஅய்ப்பிறழ்ந் தலமந் தாட
வளித்ததா ரலங்க லாழி
  யவன்றுற வுரைத்து மன்றே.