| முத்தி இலம்பகம் |
1648 |
|
|
|
மரபு. 83) என்னுஞ் சூத்திரத்தால் மன்பெறு மரபி னேனோர்க்கு முடி கூறாமையானும், 'அந்தணாளர்க்கரசு வரைவின்றே' (தொல். மரபு. 82) என்னுஞ் சூத்திரத்தான் அரசு இல்வழி அந்தணரை, அரசியல் பூண்பரென்றைமையானும், நந்தட்டன் புதல்வனை முடிசூட்டினானென்றல் பொருந்தாமையுணர்க.”
|
( 316 ) |
| 2915 |
நிலஞ்செதி ளெடுக்கு மான்றோ் | |
| |
நித்திலம் விளைந்து முற்றி | |
| |
நலஞ்செய்த வைரக் கோட்ட | |
| |
நாறுமும் மதத்த நாகங் | |
| |
குலஞ்செய்த குமரர்க் கெல்லாம் | |
| |
கொடுத்தன னிதியு நாடு | |
| |
முலஞ்செய்த வைரக் குன்ற | |
| |
மோரிரண்ட டனைய தோளான். | |
|
|
(இ - ள்.) உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான் - கல்லாற் செய்த வைரம் பொருந்திய மலை இரண்டு போன்ற தோளையுடைய சீவகன்; நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் - நிலத்தைத் தூளி செய்யும் குதிரை பூட்டிய தேர்களையும்; நித்திலம் விளைந்து முற்றி நலம் செய்த வைரக்கோட்ட நாறும் மும்மதத்த நாகம் - முத்து விளைந்து முற்றி அழகு செய்த வைரக் கிம்புரியுடைய கோட்டினையுடைய நாறும் மும்மதமுடைய யானைகளையும்; நிதியும் நாடும் - நிதியையும் நாடுகளையும்; குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன்- குலத்தை விளக்கும் மற்றைய மக்கட்கெல்லாம் கொடுத்தான்.
|
|
(வி - ம்.) 'திறம் செய்து' என்று பாடமாயின் ('குலம் செய்த' என்பதற்குப் பிரதியாக) கூறுபடுத்தி என்க.
|
( 317 ) |
| 2916 |
நூற்கிடங் கொடுத்த கேள்வி | |
| |
நுண்செவி மண்கொண் ஞாட்பில் | |
| |
வேற்கிடங் கொடுத்த மார்பின் | |
| |
வில்வலான் றோழர் மக்க | |
| |
ணாற்கடல் வளாகங் காக்கு | |
| |
நம்பிதன் கண்க ளாகப் | |
| |
பாற்கடற் கேள்வி யாரைப் | |
| |
பழிப்பற நாட்டி னானே. | |
|
|
(இ - ள்.) நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண்செவி - நூலுக்கு இருப்பிடமாகிய கேள்வியையுடைய நுண்ணிய செவியையும்; மண்கொள் ஞாட்பில் வேற்கு இடம் கொடுத்த
|