பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1652 

யும் உடையீரே!; உலவும் மனம் வைத்து - இன்பத்திலே உலவும் மனத்தை ஒருமைப்படுத்தி; உறுதி இது கேண்மின் என்றான் - நலந்தருவதாகிய இதனைக் கேண்மின் என்றான்.

   (வி - ம்.) கேண்மினம் : அம் : அசை.

   கலவம் - கலாபம் : தோகை. கால் குவித்தல் - குவித்தல் என்னும் ஒரு சொன்னீர்மைத்தாய் நின்றது. மயில் கலாபம்போலும் ஐம்பால் என்றவாறு. உலவு மனத்தை ஒருவழிப்படுத்துக் கேண்மின் என்றவாறு.

( 324 )

வேறு

2923 வாயழ லுயிர்க்கு மாழி
  மன்னவன் குறிப்பு நோக்கி
வேயழத் திரண்ட மென்றோள்
  வெம்முலைப் பரவை யல்குற்
றோய்பிழி யலங்க லார்தந்
  தொன்னலந் தொலைந்து வாடிக்
காயழற் கொடியைச் சோ்ந்த
  கற்பக மாலை யொத்தார்.

   (இ - ள்.) வேய் அழத் திரண்ட மென்தோள் - மூங்கில் வருந்தத் திரண்ட மெல்லிய தோளையும்; வெம்முலை - விருப்பூட்டும் முலையையும்; பரவை அல்குல் - பரப்புறும் அல்குலையும்; தோய்பிழி அலங்கலார் - செறிந்த மதுவையுடைய மாலையையும் உடைய அரசியார்; வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி - வாயில் நெருப்பைச் சிந்தும் ஆழியை ஏந்திய அரசன் குறிப்பைப் பார்த்து; தம் தொல்நலம் தொலைந்து வாடி - தம் பழமையான அழகு கெட்டுச் சோர்ந்து; காய் அழல் கொடியைச் சேர்ந்த கற்பக மாலை ஒத்தார் - சுடும் நெருப்பொழுங்கைச் சேர்ந்த கற்பக மாலையைப் போன்றனர்.

   (வி - ம்.) ஆழி - சக்கரப்படை. மன்னவன் : சீவகன். குறிப்பு - துறக்குங் கருத்து. அலங்கலார் - ஈண்டு மனைவிமார். நலம் - அழகு. அழற்கொடி - தீயொழுங்கு.

( 325 )
2924 கருங்கடற் பிறப்பி னல்லால்
  வலம்புரி காணுங் காலைப்
பெருங்குளத் தென்றுந் தோன்றா
  பிறைநுதற் பிணைய னீரே.