| முத்தி இலம்பகம் | 
1654  | 
 | 
  | 
| 
    அட்டுநீர் - ஒழுகும் நீர். வைரம் - ஒரு மணி. குட்டம் - ஆழம். வினவிக் கேண்மின் என்றது நன்கு கூர்ந்து கேண்மின் என்பதுபட நின்றது. 
 | 
( 327 ) | 
|  2926 | 
நரம்பொலி பரந்த கோயி |   |  
|   | 
  னன்னுதன் மகளிர் தூவும் |   |  
|   | 
பெரும்பலிச் சோற்றி னீதல் |   |  
|   | 
  பெரிதரி தாகு மேனுஞ் |   |  
|   | 
சுரும்பொலி கோதை யார்த |   |  
|   | 
  மனைவயிற் றூண்டோ றூட்டு |   |  
|   | 
மரும்பலி யனைத்து மீயி |   |  
|   | 
  னதுபொருட் குன்று கண்டீர். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நரம்பு ஒலி பரந்த கோயில் - யாழிசை பரவிய கோயிலில்; நன்னுதல் மகளிர் தூவும் பெரும்பலிச் சோற்றின் அழகிய நெற்றியையுடைய அரசியர் தெய்வங்கட்குத் தூவுகிற பெரிய பலியாகிய சோற்றைப் போல; பெரிது ஈதல் அரிது ஆகுமேனும் - மிகக் கொடுத்தல் மிடியர்க்கு அரிதாயிருக்குமாயினும்; சுருப்பு ஒலி கோதையார்தம் மனைவயின் தூண்தொறு ஊட்டும் - வண்டு முரலும் மலர் மாலையணிந்த மகளிர் தம் இல்லங்களில் தூணில் உறையுந் தெய்வங்கட்குத் தூவுகின்ற; அரும்பலி அனைத்தும் ஈயின் - அரிய பலியளவேனும் ஈவார்களாயின்; அது பொருட் குன்று - அத் தானம் பின்னர் அவருக்கு மேருவாகி நிற்கும். 
 | 
| 
    (வி - ம்.) பெரும்பலிச் சோறுபோல மிக ஈதல் அரிதாகுமாயினும் தூண்தொறும் ஊட்டும் சிறுபலி போலச் சிறிதே ஈயினும் அத்தானம் பின்பு மேருமலை போன்ற பெரும்பயனை நல்கும் என்றவாறு. 
 | 
( 328 ) | 
|  2927 | 
அற்றவர் வருத்த நீக்கி |   |  
|   | 
  யாருயிர் கொண்டு நிற்குந் |   |  
|   | 
துற்றவி ழீதல் செம்பொற் |   |  
|   | 
  றுறக்கத்திற் கேணி யாகு |   |  
|   | 
முற்றுயி ரோம்பித் தீந்தே |   |  
|   | 
  னூனொடு துறப்பின் யார்க்கு |   |  
|   | 
மற்றுரை யில்லை மண்ணும் |   |  
|   | 
  விண்ணுநும் மடிய வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அற்றவர் வருத்தம் நீக்கி - வறியவர் வருத்தத்தை நீக்கி; ஆர் உயிர் கொண்டு நிற்கும் அவிழ் ஈதல் - சிறந்த 
 |