| முத்தி இலம்பகம் | 
1660  | 
 | 
  | 
வேறு
 | 
|  2938 | 
மெய்ப்படு சாந்தும் பூவு |   |  
|   | 
  மிகநனி கமழு மேனுங் |   |  
|   | 
கைப்படு சாந்தும் பூவுங் |   |  
|   | 
  கொண்டலாற் கலக்க லாகா |   |  
|   | 
வைப்படு பித்து நெய்த்தோ |   |  
|   | 
  ரசும்புசோ ரழுகற் புன்றோற் |   |  
|   | 
பொய்ப்பட வுரைத்த துண்டோ |   |  
|   | 
  பொன்னனீர் நம்மு ணாமால். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பொன் அனீர்! - திருவனையீர்!; நம்முள் நாம் - நம்முள் நாமே கூறுகின்றோம்; ஐப்படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல் - ஐயுடன் கூடிய பித்தும் குருதியும் அசும்பு சோர்கின்ற அழுகலையுடைய இழிந்த தோலையும் உடைய; மெய்ப்படு சாந்தும் பூவும் மிகநனி கமழுமேனும் - இம் மெய்யிலே முன்னரே அணிந்த சாந்தும் பூவும் கொண்டலால் கலக்கல் ஆகா - பின்னரும் கைவழியாகிய சாந்தும் பூவும் மிக நன்றாக மணக்குமாயின்; கைப்படு சாந்தும் பூவும் கொண்டல்லது கூடலாகா; பொய்ப்படவுரைத்ததுண்டோ? - யான்இப்போது பொய் தோன்றக் கூறியது யாதாயினும் உளதோ? (கூறுமின்). 
 | 
| 
    (வி - ம்.) 'அழுகல் அசும்பு' என்று கூட்டி மலங்கள் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். 
 | 
( 340 ) | 
|  2939 | 
அனிச்சத்தம் போது போலத் |   |  
|   | 
  தொடுப்பவே குழைந்து மாழ்கி |   |  
|   | 
யினிச்செத்தாம் பிறந்த போழ்தே |   |  
|   | 
  யென்றுநா மிதனை யெண்ணித் |   |  
|   | 
தனிச்சித்தம் வைத்த றேற்றாந் |   |  
|   | 
  தளர்ந்துகண் பரப்பி நோக்கிப் |   |  
|   | 
பனித்துமென் றுற்ற போழ்தே |   |  
|   | 
  பழுதிலா வறிவி னென்னாம். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நாம் பிறந்த போழ்தே இனிச் செந்தாம் என்று இதனை எண்ணி - நாம் பிறந்த பொழுதே இனி இறந்தோம் அல்லமோ என்று இம் மெய்யை எண்ணி; அனிச்சத்து அம்போது போல - (நூலாற் றொடுப்பவே மயங்கி வாடும்) அனிச்சமலர்போல; தொடுப்பவே குழைந்து மாழ்கி - தீவினை தொட்ட 
 |