| முத்தி இலம்பகம் | 
1668  | 
 | 
  | 
|  2952 | 
அன்னமே தோகை நல்யா | 
 | 
|   | 
  ழமுதமே யாய்ந்த தீந்தே | 
 | 
|   | 
னின்னரே நங்கை மாரென் | 
 | 
|   | 
  றேத்திய பவளச் செந்நா | 
 | 
|   | 
வென்னைநீ கண்ட தெம்மை | 
 | 
|   | 
  யிரண்டுநா வாயி னாயே | 
 | 
|   | 
மன்னன்போ லீர மின்றி | 
 | 
|   | 
  வலித்தனை வாழி யென்பார். | 
 | 
| 
    (இ - ள்.) அன்னம் தோகை நல்யாழ் அமுதம் ஆய்ந்த தீ தேன் இன்னர் நங்கைமார் என்று - அன்னமும் மயிலும் அழகிய யாழும் அமுதமும் ஆராய்ந்த இனிய தேனும் ஆகிய இத்தன்மையர் நங்கையர் என்று; ஏத்திய பவளம் செந்நா - வாழ்த்திய பவளம்போன்ற செவ்விய நாவே!; எம்மை நீ கண்டது என்னை? - (இப்போது) எம்மிடம் நீ கண்ட குற்றம் என்னையோ?; மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை - அரசனைப்போல அன்பின்றி அழித்துக்கூறத் துணிந்தானை!; இரண்டு நா ஆயினாய் என்பார் - (கூறாயேல்) இரண்டு நாவாக ஆய்விட்டாய் என்பார். 
 | 
| 
    (வி - ம்.) இன்னர் - இத்தன்மையர். செந்நா : விளி எம்மை : வேற்றுமை மயக்கம். மன்னர் : சீவகன். வாழி : அசை. 
 | 
( 354 ) | 
|  2952 | 
பூணினா னெருங்க நொந்து |   |  
|   | 
  பொதிர்த்தன வெம்பி யென்று |   |  
|   | 
நாணினால் வருத்தந் தீர்ப்பா |   |  
|   | 
  னன்முலைக் கண்க டம்மைப் |   |  
|   | 
பேணிநீ ரெழுதி யோம்பிப் |   |  
|   | 
  பேரின்பங் கொண்டு தந்தீர் |   |  
|   | 
காண்மினோ வின்றெம் வண்ணங் |   |  
|   | 
  கண்ணிலீர் கண்க ளென்பார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கண்கள் - கண்களே!; பூணினால் நெருங்க வெம்பி நொந்து பொதிர்த்தன என்று - (இவை) பூணுடன் நெருங்குவதாலே வெம்பி நொந்து புடைக்கொண்டன என்று (அரசன்) கருதி; நாணினால் வருத்தம் தீர்ப்பான் - (மேலும் நொய்துற அணிந்த) பொன்னாணால் (அம் முலைகட்குப்) பிறந்த வருத்தத்தை நீக்குதற்கு; நீர் நன்முலைக் கண்கள் தம்மைப் பேணி - நீர் அம் முலைக் கண்களைப் பேணி; எழுதி ஓம்பிப் பேரின்பம் கொண்டு தந்தீர் - எழுதிப் பாதுகாத்துப் பேரின்பங் கொண்டு எமக்கும் அப் பேரின்பம் கொடுத்தீர்; இன்று கண்ணி 
 |