| முத்தி இலம்பகம் | 
1678  | 
 | 
  | 
|  2970 | 
அழலார் சுரையெயிற்று வெஞ்சினவைந் |   |  
|   | 
  தலைசுமந்த வெகுளி நாக |   |  
|   | 
நிழலார் திருமணியுந் தேவர் |   |  
|   | 
  திருமுடிமே னிலவி வீசுஞ் |   |  
|   | 
சுழலார் பசும்பொன்னும் வேய்ந்து |   |  
|   | 
  சொரிகதிர்மென் பஞ்சி யார்ந்த |   |  
|   | 
கழலா னகர மமுது |   |  
|   | 
  கடைகடல்போற் கலங்கிற் றன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அழல் ஆர் சுரை எயிற்று வெஞ்சின வெகுளி நாகம் - நஞ்சு பொருந்திய குழல்போன்ற பற்களையும் வெஞ்சின வெகுளியையும் உடைய நாகத்தின், ஐந்தலை சுமந்த நிழல் ஆர் திருமணியும் - ஐந்தலையிலே சுமந்த, ஒளி நிறைந்த அழகிய மணியும், தேவர் திருமுடிமேல் நிலவி வீசும் சுழல் ஆர் பசும்பொன்னும் - (இனி வணங்கும்) வானவர் திருமுடிமேல் விளங்கி வீசும் சுழலும் ஒளியுடைய புதிய பொன்னணியும்; வேய்ந்து - அணிந்து; கதிர் சொரி மென் பஞ்சி ஆர்ந்த கழலான் - ஒளி வீசும் மென்மையான பஞ்சுபோல் மென்மை நிறைந்த கழலானின்; நகரம் அமுது கடை கடல்போல் கலங்கிற்று - நகரம் அமுது கடையுங் கடல்போலக் கலங்கியது. 
 | 
| 
    (வி - ம்.) வானவர் வணங்குதல், இனிமேல் சீவகனடையும் சிறப்பு, 'சுழலார் வானவர்' எனக்கூட்டி 'வலம்வரும் வானவர்' எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். 
 | 
( 372 ) | 
25.நகர விலாவணை
 | 
வேறு
 | 
|  2971 | 
நீர்நிறை குளத்து மாரி |   |  
|   | 
  சொரிந்தென நறுநெய் துள்ளு |   |  
|   | 
நோ்நிறை பொரியுங் குய்யும் |   |  
|   | 
  வறைகளு நிவந்த வாசம் |   |  
|   | 
பார்நிறை யடிசிற் பள்ளி |   |  
|   | 
  தளியொடு சாலை யெல்லா |   |  
|   | 
மூர்நிறை யுயிர்த்த லின்றி |   |  
|   | 
  யுயிர்சென்ற போன்ற வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம் - உலகு நிறைந்த புகழையுடைய அட்டில்களிலும் கோயில்களிலும் சோறிடுஞ் சாலைகளிலும் ஆக எங்கும்; நீர் நிறை 
 |