பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1681 

வாய் முழவம் விம்ம - யாழிசைக்கவும் முழவம் முழங்கவும்; ஆட்டு ஒழிந்து தீ தேன் ஊழிவாய்க் கொண்டது ஒக்கும் - பாடலும் ஆட்டமும் ஒழிந்து, இனிய தேனினம் முரல்வது மாறி முறையாகப் பாடினாற்போன்ற பாடலும் ஒழிந்தது.

   (வி - ம்.) முழவம் விம்ம ஆடலும், யாழிசைக்கப் பாடலும் என மாற்றிக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். யாழிசையும் பாட்டும் கூத்துக்கும் பொருந்துமாதலின் வேறு பிரிப்பதாற் பயனின்றென்க. ஊழ் ஊழியெனத் திரிந்தது.

( 376 )
2975 அருங்கல நிறைந்த வம்பூம்
  பவளக்கா றிகழம் பைம்பொற்
பெருங்கிடு கென்னுங் கோலப்
  பேரிமை பொருந்தி மெல்ல
வொருங்குட னகர மெல்லா
  முரங்குவ தொத்த தொல்லென்
கருட்கடல் கல்லென் சும்மை
  கரந்தது மொத்த தன்றே.

   (இ - ள்.) அருங்கலம் நிறைந்த அம் பூம் பவழக் கால் திகழும் - அரிய கலங்கள் நிறைந்த, அழகிய பூவேலை செய்த பவழக் காலிலே திகழ்கின்ற; பைம்பொன் பெருங்கிடுகு என்னும் கோலப் பேரிமை பொருந்தி - பைம் பொன்னாலான பெரிய சட்டம் என்னும் பெரிய இமை பொருந்தி; நகரம் எல்லாம் ஒருங்கு உடன் உறங்குவது ஒத்தது - நகரம் முழுதும் ஒன்றாக உறங்குவதைப் போன்றது; ஒல்லென் கருங்கடல் சும்மை கரந்ததும் ஒத்தது - ஒலிக்குங் கரிய கடல் தன் ஒலியை மறைத்ததும் போன்றது.

   (வி - ம்.) கலங்கள் நிறைந்து, பவழக்காலிலே பொன்சட்டத்தினால் மூடப்படுவது அங்காடித்தெரு. நகருக்கு அங்காடி கண்ணாகவும் சட்டம் அத்தெருவின் இமையாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. இதனால் அங்காடி யடைத்தது என்றார்.

( 377 )
2976 கலையுலாய் நிமிர்ந்த வல்குற்
  கடல்விளை யமுத மன்னார்
முலையுலாய் நிமிர்ந்த மொய்தார்
  முழவுமுத் துரிஞ்சி மின்னச்
சிலையுலாய் நிமிர்ந்த மார்பன்
  றிருநகர் தெருள்க லாதாய்
நிலையிலா வுலகின் றன்மை
  நீர்மைமீக் கூறிற் றன்றே.