பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1685 

   (இ - ள்.) கொல் உலைப் பொங்கு அழல் கிடந்த - கொல்லன் உலையிலே பொங்கியெழும் நெருப்பிலே கிடந்த; கூர் இலை மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்தபோல் - கூரிய இலைவடிவுடைய வளவிய வேல்கள் இரண்டினை ஒரு திங்களிடத்தே வைத்தனபோல; செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார் - மிகுதியும் நீண்டு அகன்று உள்ளே சிவந்த கண்ணினராய்; அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான் - துன்புற்றழும் மங்கையர்க்குச் சீவகன் கூறினான்.

   (வி - ம்.) சொல்லினான் : வினைத்திரிசொல். கண்ணினார் : முற்றெச்சம்.

   கொல் - கொல்லன் : தொழிலுமாம். உலையின் கண்ணழல் என்க. மல்லல் - வளம். இரண்டு வேல் இரண்டு கண்களுக்குவமை. மதி - முகத்திற்குவமை. செல்ல நீண்ட - மிகநீண்ட. அழும் கண்ணினார்க்கு என்றவாறு. அரசன் : சீவகன்.

( 384 )

வேறு

2983 நற்றவம் பரவை ஞால
  நாமுட னிறுப்பின் வைய
மற்றமி றவத்திற் கென்று
  மையவி யனைத்து மாற்றா
திற்றென வுணர்ந்து நிற்பிற்
  றிருமக ளென்று நீங்காள்
பற்றொடே நிற்பி னென்றுந்
  திருமகள் பற்றல் செல்லாள்.