| முத்தி இலம்பகம் |
1722 |
|
|
|
(இ - ள்.) வெண்திரைப் புணரிசூழ் வேலி வேந்தன் - வெள்ளிய அலைகளையுடைய கடல்சூழ்ந்த வேலிக்கு மன்னன் ஆகிய சேணிகன்; வண்டுசூழ் பூப்பலி சுமந்து - வண்டுகள் சூழும் மலர்ப்பலியைச் சுமந்து; வலம் கொண்டு சூழ்ந்து கோனடி எழுமுறை இறைஞ்சி - வலம் வந்து சூழ்ந்து இறைவனடியை ஏழுமுறை வணங்கி; எண் திசையவர்களும் மருள ஏத்தினான் - எட்டுத் திக்கினில் உள்ளவர்களும் மயங்க வாழ்த்தினான்.
|
|
(வி - ம்.) புணரியைச் சூழ்ந்த வேலி சக்கரவாளகிரி. அதற்கு வேந்தன் எனவே சேணிகன் சக்கரவர்த்தி யாயினான்.
|
( 454 ) |
வேறு
|
| 3053 |
பகல்வளர் பவழச் செந்தீப் | |
| |
பருதிமுற் பட்ட தேபோ | |
| |
லிகல்வினை யெறிந்த கோமா | |
| |
னிணையடி யொளியிற் றோன்றா | |
| |
தகல்விசும் புறையுந் தேவ | |
| |
ரொளியவிந் திருப்ப மன்னன் | |
| |
முகிழ்கிழி மதியம் போலு | |
| |
முனிக்குழா நோக்கி னானே. | |
|
|
(இ - ள்.) பகல்வளர் பவளச் செந்தீ பருதிமுன் பட்டதே போல் - பகலில் வளரும் பவளம்போலும் செந்தீ ஞாயிறுமுன் ஒளிமழுங்கினாற்போல; இகல்வினை எறிந்த கோமான் இணையடி ஒளியின் - தீவினையை எறிந்த இறைவனின் இணையடி ஒளியின் முன்னால்; அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி தோன்றாது அவிந்து இருப்ப - பரவிய வானில் வாழும் வானவர் ஒளி வெளிப்படாமல் மழுங்கியிருந்த அளவிலே; மன்னன் முகில் கிழிமதியம் போலும் முனிக்குழாம் நோக்கினான் - சேணிகன் முகிலைக் கிழித்துவரும் திங்கள்போலும் முனிவர் திரளை நோக்கினான்.
|
|
(வி - ம்.) பகல்வளர்தீ, பவழச் செந்தீ எனத் தனித்தனி கூட்டுக. பருதி - ஞாயிறு, கோமான் - இறைவன், மன்னன் : சேணிகன், வினையீனீங்கி விளங்குதற்கு முகில் கிழிமதியம் என்றார்.
|
( 455 ) |
| 3054 |
கண்வெறி போக வாங்கோர் | |
| |
கடுந்தவ னுருவ நோக்கி | |
| |
யொண்ணெறி யொருவிக் கோமா | |
| |
ணொளிதிரண் டிருந்த தாங்கொல் | |
| |
|