| முத்தி இலம்பகம் |
1744 |
|
|
|
அடுக்கிக் குவித்ததாகிய ஒரு குன்றெனவே விளங்கும்; விளம்பலாம்? - ஆதலால் (நமக்கும் அதன் தன்மை) கூற இயலும்.
|
|
(வி - ம்.) உறுப்புகள் இரு சுடர்களையும் அடுக்கினாற் போலும் மெய் உலையின்கட் கிடந்த இரும்பு போன்ற நிறமுடைய குன்று போலும் விளங்கும் என்க.
|
|
'இருவினையை வெறுத்துக் கெடுத்தாற்கு இயல்பாக உளதாம் நிறமாகிய அதனை, உறுப்பெல்லாந்தானே ஒளியைக் கான்று, எரியின் வாய்க் கிடந்து தன் கறுப்புத் தீர்ந்த இரும்பே சான்றன்றோ என்ற, குன்று போன்று விளக்கிக் கூறாநிற்கும்; ஆதலால், நமக்கும் அதன் தன்மை கூறலாம்' என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.
|
|
இம் மூன்று செய்யுட்களும் ஆசிரியர் தம் மகிழ்ச்சியாலே எடுத்துக் காட்டுவமையான் உலகிற்கு அறிவித்தார்.
|
( 491 ) |
வேறு
|
| 3090 |
வானோ ரேந்து மலர்மாரி | |
| |
வண்ணச்சாந்தம் பூஞ்சுண்ணங் | |
| |
கனார் பிண்டிக் கமழ் தாமங் | |
| |
கறையார் முகிலி னிறங்காட்டுந் | |
| |
தேனார் புகைக ளிவையெல்லாந் | |
| |
திகைப்பத் திகைகண் மணநாறி | |
| |
யானா கமழுந் திருவவிப்போ | |
| |
தமரர்முடிமே லணிந்தாரே. | |
|
|
(இ - ள்.) வானோர் ஏந்தும் மலர்மாரி - வானவர் கொண்டு வந்த பெய்யும் பூமழையும்; வண்ணச் சாந்தம் - கலவைச் சந்தனமும்; பூஞ்சுண்ணம் - அழகிய சுண்ணப் பொடியும் ; கான் ஆர் பிண்டிக் கமழ்தாமம் - மணம் நிறைந்த அசோகின் மாலையும்; கறைஆர் முகிலின் நிறம் காட்டும் தேன்ஆர் புகைகள் - கருமை பொருந்திய முகிலின் ஒளியைக் காட்டும் இனிய புகைகளும்; இவையெல்லாம் திகைப்ப - இவை யாவும் கெட; திகைகள் மணம் நாறி - திசைகள் எங்கும் மணங்கமழ்ந்து; ஆனா கமழும் திருவடிப்போது அமரர் முடிமேல் அணிந்தார் - அமையாமற் கமழும் திருவடி மலரை வானவர் முடிமேல் அணிந்தனர்.
|
|
(வி - ம்.) பூஞ்சுண்ணம் - அழகிய நறுமணப்பொடி, கான் - நறுமணம். கறை - கருநிறம், புகை - நறுமணப்புகை, திகை -திசை, ஆனா - அமையாதனவாய், வழிபட்டுப் பொருள்களின் நறுமணம் மிகுந்து, புலமெலாம் மணக்குங்கால் புரையில் பொருளின் திருவடிப் பொதின்கண் மணக்குமணம் சொல்லொணா தென்க.
|
( 492 ) |