| முத்தி இலம்பகம் | 
1751  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) மதியம் - சீவகசாமிக்குவமை. தீங்கதிர்- அவன்மொழி கட்குவமை, ஆம்பல்-தேவியர்க்குவமை. அறிவன்; இறைவன், துளங்குமுள்ளம் - தீவினையால் துளங்கும் நெஞ்சம். 
 | 
( 505 ) | 
|  3104 | 
ஆர்ந்தகுணச் செல்வனடித் தாமரைக ளேத்திச் |   |  
|   | 
சோ்ந்துதவ வீரர்திசை சிலம்பத் துதியோதித் |   |  
|   | 
தூர்ந்தவிரு டுணிக்குஞ்சுடர் தொழுதருளு கென்றார் |   |  
|   | 
கூர்ந்தமிழ்த மாரியெனக் கொற்றவனுஞ் சொன்னான். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆர்ந்த குணச் செல்வன் அடித் தாமரைகள் ஏத்தி - நிறைந்த குணச் செல்வனின் அடிகளாகிய தாமரை மலர்களை வாழ்த்தி; தவவீரர் சேர்ந்து - தவம் புரிந்த வீரர் யாவருங்கூடி; திசை சிலம்பத் துதி ஓதித் தொழுது - திசையெங்கும் முழுங்க வாழ்த்துக் கூறித் தொழுது; தூர்ந்த இருள் துணிக்கும் கூடர் அருளுக என்றார் - நெடுங்காலமாய்ச் செறிந்த இருளை அறுக்கும் சுடரை எமக்குக் கூறியருள்க என்றனர்; கொற்றவனும் அமிழ்த மாரி எனக் கூர்ந்து சொன்னான். அரசனும் அமிழ்த மழைபோல ஆராய்ந்து கூறினான். 
 | 
| 
    (வி - ம்.) சுடர்: பரமாகமம். 
 | 
| 
    தொழுது சுடர் அருளுக என்றார் என மாறுக. அவன் சொன்னபடி மேற்கூறுகின்றார். 
 | 
( 506 ) | 
|  3105 | 
இன்பமற் றென்னும் பேரா |   |  
|   | 
  னெழுந்தபுற் கற்றை தீற்றித் |   |  
|   | 
துன்பத்தைச் சுரக்கு நான்கு |   |  
|   | 
   கதியெனுந் தொழுவிற் றோன்றி |   |  
|   | 
நின்றபற் றார்வ நீக்கி |   |  
|   | 
  நிருமலன் பாதஞ் சேரி |   |  
|   | 
னன்புவிற் றுண்டு போகிச் |   |  
|   | 
  சிவகதி யடைய லாமே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இன்பம் என்னும் பேர் ஆன் - இன்பம் ஆகிய பெரிய பசு; நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி - நான்கு கதி என்கிற தொழுவிலே தோன்றி; எழுந்த புல் கற்றை தீற்றி-மனவெழுச்சி என்னும் புல்லாகிய கற்றையைத் தின்று; துன்பத்தைச் சுரக்கும் - துன்பமாகிய பாலைச் சுரக்கும்; நின்ற பற்று ஆர்வம் நீக்கி - அதனிடத்து நின்ற பற்றையும் ஆர்வத்தையும் நீக்கி ; நிருமலன் பாதம் சேரின் - தூயவன் திருவடிகளை அடைந்தால்; அன்பு விற்று உண்டு போகிச் சிவகதி அடையலாம் - அன்பைக் கொடுத்து அத் திருவடியை நினைத்துச் சென்று வீட்டுலகை அடையலாம். 
 |