| முத்தி இலம்பகம் |
1752 |
|
|
|
(வி - ம்.) மற்று :அசை.
|
|
இன்பம்: ஆகுபெயர்; அவா என்க. நான்குகதி - மக்கள் தேவர் நரகர் விலங்கு கதிகள். தீற்றி - ஊட்டப்பட்டு. பற்று -பெற்ற பொருள்மே னிகழ்வது; ஆர்வம் - பெறாதபொருள்மேனிகழுவது. நிருமலன் - இறைவன். அன்பு விற்று என்பது சிவகதிக்குப் பண்டமாற்றாகக் கொடுத்து என்றவாறு. சிவகதி-வீடுபேறு.
|
( 507 ) |
| 3106 |
வாட்கையம் மைந்த ராயும் | |
| |
வனமுலை மகளி ராயும் | |
| |
வேட்கையை மிகுத்து வித்திப் | |
| |
பிறவிநோய் விளைத்து வீயாத் | |
| |
தேட்கையிற் கொண்ட தொக்கு | |
| |
நிச்சநோய்ச் செற்றப் புன்றோற் | |
| |
பூட்கையை முனியின் வாமன் | |
| |
பொன்னடி தொழுமி னென்றான். | |
|
|
(இ - ள்.) வேட்கையை மிகுத்து வித்தி - ஆசையைமிகுத்து விதைத்து ; வாள் கை அம் மைந்தராயும் - வாளைக் கையிலேந்திய அழகிய மைந்தராயும்; வனமுலை மகளிராயும்- அழகிய முலையை உடைய மகளிராயும்; பிறவி நோய் விளைத்து - பிறவிப் பிணியை விளைவித்து ; வீயா - கெடாமல்; தேள் கையில் கொண்டது ஒக்கும் - தேளைக் கையிலே பிடித்திருந்த தன்மையை ஒப்பதும்; நிச்சம் நோய் செற்றம் புன்தோல் - நாடோறும் (தாகமும் மோகமுமாகிய) நோயினையும் செற்றத்தினையும் உடையதும் ஆகிய புன் தோலாகிய; பூட்கையை முனியின் - மேற்கோளை வெறுத்தால்; வாமன் பொன் அடி தொழுமின் என்றான் - அருகனுடைய பொன்னடியை வணங்குமின் என்றான்.
|
|
(வி - ம்.) பூட்கையையும் உடைய தோல் என்பர் நச்சினார்க்கினியர். 'வீயாது ' என்பது 'வீயா' என விகாரப்பட்டது ; ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.
|
( 508 ) |
| 3107 |
தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோன் | |
| |
மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமே | |
| |
லின்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப் | |
| |
பொன்னுயி ராய்ப்பிறந் துயர்ந்து போகுமே. | |
| |
|
|
(இ - ள்.) தன் உயிர் தான் பரிந்து ஓம்பும் ஆறுபோல் - தன் உயிரைத் தான் விரும்பிக் காப்பாற்றும் வகைபோல; வைகலும் மன் உயிர் ஓம்பி வாழுமேல் - நாடோறும் பிறவுயிரக் காத்து வாழ்வனெனின்; இன் உயிர்க்கு இறைவனாய் இன்பமூர்த்தியாய்ப் பொன் உயிராய் - இனிய உயிர்க்குத் தலைவனாய்.
|