| முத்தி இலம்பகம் |
1762 |
|
|
|
(வி - ம்.) இது முதல் மூன்று பாட்டுக்கள் ஒருதொடர்.
|
|
தவளை வாய்போன்ற வாயையுடைய கிண்கிணி என்க. கிண்கிணி - சதங்கை. கோலம் - அழகு. வாழ்த்துதல் - ஈண்டு நலம் பாராட்டுதல். எனா - என்று புகழ்ந்து . திவள - துவள.
|
( 528 ) |
| 3127 |
பன்ம ணிக்கதிர்ப் பரவை மேகலை | |
| |
மின்ன ணிந்துகத் திருத்தி வெம்முலைப் | |
| |
பொன்ன ணிந்துபூஞ் சுண்ணந் தைவர | |
| |
நன்ம ணிக்குழை யிரண்டு நக்கவே. | |
| |
|
|
(இ - ள்.) பன் மணிக் கதிர்ப் பரவை மேகலை மின் அணிந்து உகத்திருத்தி - பல மணிகளையுடைய ஒளிவீசும் பரவிய மேகலையை மின்போல அணிந்து (மணி) சிந்தத் திருத்தியும; வெம்முலைப் பொன் அணிந்து - வெம் முலைமிசை பொன்னணி புனைந்தும்; பூஞ்சுண்ணம் தைவர - அழகிய சுண்ணப் பொடியைத் தடவியதால்; நன்மணிக் குழை இரண்டும் நக்க - நல்ல மணிகள் இழைத்த குழைகள் இரண்டும் ஒளிவீசின.
|
|
(வி - ம்.) இவ்வாறு பலவகையினும்பாராட்டியதால்அம் மங்கையரின் காதணிகள் ஒளி வீசின; என்றது, ஊடல் தீர்ந்ததைக் குறிக்கும்.
|
|
நச்சினார்க்கினியர் முற்செய்யுளில் உள்ள 'குவளைக் கண்மலர்' என்பதன் பின் 'குழையிரண்டும் நக்க' என்பதனை இணைத்து, 'கண்மலர்
|
|
னார்க்கு அது ஓர் தவறது ஆகும் - அஞ்சினவர்களுக்குத் தவறாகிய அது பிறந்தேவிடும்.
|
|
(வி - ம்.) இவ்வாறு கூறி அவர் புலவியைத் தீர்த்தனர்.
|
|
நெஞ்சு - மார்பு. நேர் - அழகு. இழை - அணிகலன். இழையால் அடி வருந்தும் என்றியைக்க. எனா - என்றுகூறி. பாவை, பூநுதால் இரண்டும் விளிகள்.
|
( 527 ) |
| 3126 |
தவளைக் கிண்கிணித் தாமஞ் சோ்த்தியுங் | |
| |
குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியு | |
| |
மிவளைக் கண்டகண் ணிமைக்கு மோவெனாத் | |
| |
திவளத் தேமலர்க் கண்ணி சோ்த்தியும். | |
| |
|
|
(இ - ள்.) தவளைக் கிண்கிணித் தாமம் சேர்த்தியும் - தவளையின் வாயைப்போன்ற கிண்கிணி மாலையை அடியிலே சேர்த்தும்; குவளைக் கண்மலர்க் கோலம் வாழ்த்தியும் - குவளை மலர்போன்ற கண்களின் அழகைப் புகழ்ந்தும்; இவளைக் கண்ட கண் இமைக்குமோ எனா - இவளைப் பார்த்த கண்கள் இமையா என்று புகழ்ந்து; தேன் மலர்க் கண்ணி திவளச்சேர்த்தியும் - தேனையுடைய மலர்மாலையை அசைய அணிவித்தும்;
|