| முத்தி இலம்பகம் |
1764 |
|
|
|
(வி - ம்.) இவை கூட்டத்தே நிகழ்வன. 'ஆவித்துத் தேன் சொரி கண்ணி'யென இயைப்பர் நச்சினார்க்கினியர்.
|
( 531 ) |
| 3130 |
இலங்கு கொம்பனார் காம மென்னும்போ் | |
| |
கலந்த கள்ளினைக் கைசெய் தையென | |
| |
மலர்ந்து வாய்வைத்தார் மணிகொள் வள்ளத்தே | |
| |
நலங்கொள் சாயலார் நடுங்கி நையவே. | |
| |
|
|
(இ - ள்.) இலங்கு கொம்பனார் நலங்கொள் சாயலார் - விளங்கும் பூங்கொம்பனையாரும் நன்மை கொண்ட அழகினரும் ஆகிய அம் மங்கையர், நடுங்கி நைய - நடுங்கிச் சோர்வடைய; காமம் என்னும் பேர் கலந்த கள்ளினைக் கைசெய்து - காமம் என்னும் பெயர் கூடிய கள்ளை ஒழுங்கு செய்து; ஐ யென மலர்ந்து - அழகுற மகிழ்ந்து; மணிகொள் வள்ளத்தே வாய் வைத்தார் - முத்துக்களைக்கொண்ட கிண்ணத்திலே வாய்க்கொண்டார்.
|
|
(வி - ம்.) மணிகொள் வள்ளத்துக்காமம் என்னும் பேர் கலந்த கள்ளினை வாய்வைத்தார் என்க. மணிகொள் வள்ளம் : முறுவல் கொண்ட வாய்க்கு உவமம். கள்ளுப்போலே எயிற்று நீர் மகிழ்ச்சி கொடுத்தலிற் கள்ளென்றார். இருதிறத்தாரும் இதழ் பருகின்மை கூறிற்றென்பர் நச்சினார்க்கினியர்.
|
|
அவர், 'மணிகொள் வள்ளத்து நலம்கொள் காமம் என்னும் பேர் கலந்த கள்ளினை வாய் வைத்தார்' என்றது, முத்தைத் தன்னிடத்தே கொண்ட வாயாகிய வட்டிலிலேயிருந்து நன்மைகொண்ட வேட்கையென்னும் பெயர் கூடின கள்ளை அவர்கள் வாயிடத்தே வைத்தார்களென்றவாறு; என்றது, 'இருதிறத்தோரும் அதரபானம் பண்ணினமை கூறிற்று' என்று பொருள் கூறுவர். மேலும் அவர் இச்செய்யுளையும் முற்செய்யுளையும் ஒன்றாக்கிக்கொண்டு கூட்டுவர்.
|
|
அப்பொருள் முடிபு:
|
|
”அவர்கள் தம் தேவியரை அங்ஙனம் கைசெய்து மலர்ந்து ஐயென, கொம்பனாராகிய சாயலார் நடுங்கி நையும்படி அவர் மெய்ந்நலத்தைப் புல்லி வாய்வைத்தார்; அப்பொழுது கண்ணிகள் சிந்தத் தார்புரளக் கிண்கிணி சிலம்ப மேகலை வாய்விட்டு ஆர்த்தன என்க.”
|
( 532 ) |
| 3131 |
வெம்மை கொண்டதே னமிர்த மெல்லவே | |
| |
யம்மை யஞ்சொலா ரார வுண்டவர் | |
| |
தம்மைத் தாமகிழ்ந் துறைய வித்தலைச் | |
| |
செம்மை மாதவர்க் குற்ற செப்புவாம். | |
| |
|
|
(இ - ள்.) வெம்மை கொண்ட தேன் அமிர்தம் - வேண்டுதல் கெண்ட இனிய அமிர்தத்தை; அம்மை அம் சொலார் மெல்ல ஆர உண்டவர் - அமைதியுறும் அழகிய மொழியினார்
|