பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1767 

   களிற்றிற்கு ஊற்றின்பமே மிக்க இன்பமாகலின், ஊற்றின்பத்திற்கு இஃது உவமையாயிற்று. ஊற்றின்பம் - தொடுதலான் வரும் இன்பம். தூய வாழ்க்கையினடிப்படை யிது.

( 537 )

வேறு

3136 காதணிந்த தோடொருபான் மின்னு வீசக்
  கதிர்மன்னுக் குழையொருபாற் றிருவில் வீசத்
தாதணிந்த தாமங்க ளொருபாற் சோரத்
  தாமரைக்கண் டாமிரங்கப் புருவு மாட
மாதணிந்த நோக்கினா ரல்குற் காசு
  மணிமழலைக் கிண்கிணியுஞ் சிலம்பு மேங்கப்
போதணிந்த தாருடையப் பொருது பொங்கிப்
  புணர்முலைகள் போர்க்களந்தாங் கண்ட வன்றே.

   (இ - ள்.) மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலைக் கிண்கிணியும் சிலம்பும் ஏங்க - காதல் அமைந்த பார்வையினாரின் அல்குலில் அணிந்த மேகலைக் காசும் ஒலிக்கும் மணிக் கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க (அவர்களுடன் வானவர் பொருதலாலே); காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச - காதில் அணிந்த தோடு ஒரு பக்கம் ஒளி வீச; கதிர் மின்னுக்குழை ஒருபால் திருவில் வீச - ஒளிதரும் மின்னுக்குழை ஒரு பக்கத்தில் வான வில்லென ஒளிவிட; தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர - பூந்தாது பொருந்திய மாலைகள் ஒருபக்கத்தே சோர; தாமரைக்கண் தாம் இரங்க - தாமரை மலரனைய கண்கள் உவகைக் கண்ணீர் சிந்த; புருவம் ஆட - புருவம் ஏறி வளைய; போது அணிந்த தார் உடைய - (கணவரின்) மலர் பொருந்திய மாலை உடைய; புணர்முலைகள் பொங்கிப் பொருது - இரு முலைகளும் விம்மிப் பொருதலால்; போர்க்களம் கண்ட - காமப் போர்க்களத்தை (அம் முலைகள்) கண்டன.

   (வி - ம்.) பொருது - பொர : எச்சத்திரிபு.

   மின்னு - ஒளி. திருவில் - அழகிய ஒளி. தாது - பூந்துகள். தாம் : அசை. மாது - காதல். பொருது - பொர. தாம் : அசை. அன்றும் ஏயும் அசைகள்.

( 538 )
3137 முழுதார மின்னுமுலைக் குவட்டினான்மொய்ம்
  மார்பிற்குங் குமச்சே றிழுக்கிவீழ
வுழுதார்வம் வித்தி யுலப்பிலாத
  நுகர்ச்சிவிளைத் தலர்ந்தகற் பகத்தின்கீ