| முத்தி இலம்பகம் |
1771 |
|
|
| 3142 |
பகடு படவடுக்கிப் பண்ணவனார் | |
| |
தம்மொளிமே னின்றாற் போலுந் | |
| |
தகடு படுசெம்பொன் முக்குடையான் | |
| |
றாளிணையென் றலைவைத் தேனே. | |
| |
|
|
(இ - ள்.) முகடு மணி அழுத்தி - உச்சியில் மணியை அழுத்தி; முள் வைரம் உள் வேய்ந்து - கூரிய வைரத்தை உள்ளே அழுத்தி; வாய் முத்தம் சூழ்ந்து - விளிம்பிலே முத்தமாலை சூழ்ந்து; அகடு பசுமணி ஆர்ந்து - நடுவே நீலமணி நிறைந்து; அங்காந்து இருள் பருகி - வாயைத் திறந்து இருளைப் பருகி ; அடுபால் விம்மி - காய்ச்சின பால் போன்ற ஒளியை முத்துச் சொரிந்து ; பகடுபட அடுக்கி - பெருமைபெற மூன்றாக அடுக்கி; பண்ணவனார் தம் ஒளிமேல் நின்றால் போலும் - இறைவனார் ஒளி மேலே நின்றாற் போன்ற; தகடுபடு செம்பொன் முக்குடையான் தாளிணை என்தலை வைத்தேன் - தகடாகப் பொருந்திய பொன்னாலாகிய முக்குடையானின் தாளிணைகளை என் தலைவைத்தேன்.
|
|
(வி - ம்.) முகடு - உச்சி, முள் - கூர்மை. வாய் - விளிம்பு. அகடு - நடுவிடம். அடுபால் : வினைத்தொகை. பகடு - பெருமை. பண்ணவனார் - அருகக் கடவுள். முக்குடையான் - அருகக் கடவுள்.
|
|
இவ்விலக்கியம் இடுக்கணின்றி இனிது முடிந்த மகிழ்ச்சியான் மீட்டும் வணங்கினார்.
|
( 544 ) |
ஓம்படை
|
| 3143 |
முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து | |
| |
வாய்முரன்று முழங்கி யீன்ற | |
| |
மெய்ந்நீர்த் திருமுத் திருபத்தேழ் | |
| |
கோத்துமிழ்ந்து திருவில் வீசுஞ் | |
| |
செந்நீர்த் திரள்வடம்போற் சிந்தா | |
| |
மணியோதி யுணர்ந்தார் கேட்டா | |
| |
ரிந்நீர ராயுயர்வ ரேந்துபூந் | |
| |
தாமரையாள் காப்பா ளாமே. | |
|
|
(இ - ள்.) முந்நீர் வலம்புரி - சோழகுலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி; சோர்ந்து அசைந்து - பிறர் குற்றம் கூறுகின்றார் என்று தளர்ந்து நடுங்கி; வாய் முரன்று முழங்கி - வாயினால் மெல்ல இசைத்துப் பின் மிகவும் முழங்கி; ஈன்ற மெய்நிர்த் திருமுத்து இருபத்தேழ் - பெற்ற தன் மெய்விடத்து நீர்மையாகிய அழகிய முத்துக்கள் இருபத்தேழையும்; செந்நீர்த்திரள் - சிவந்த நீர்மையையுடைய மாணிக்கத் திரளையும்; வடம
|